அர்ப்பணிப்பு, துணிச்சலுடன் தொண்டு செய்த அறுவருக்கு 'கொவிட்-19 போராட்ட வீரர்' விருது

அர்ப்பணிப்பு, துணிச்சலுடன் தொண்டு செய்த அறுவருக்கு 'கொவிட்-19 போராட்ட வீரர்' விருது

1 mins read
6437df93-e779-48aa-a635-49db6101d1aa
அதிபர் ஹலிமா யாக்கோப் இஸ்தானாவில் மெய்நிகர் நிகழ்ச்சியில் கொவிட்-19 போராட்ட வீரர் விருதை ஆறு பேருக்கு வழங்கி அவர்களைப் பாராட்டி சிறப்பித்து வாழ்த்தினார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

தேசிய சுகா­தார பரா­ம­ரிப்­புக் குழும பல­துறை மருந்தக (NHGP) கொவிட்-19 போராட்ட வீரர்­ விருது ஆறு பேருக்கு வழங்கி சிறப்­பிக்­கப்­பட்டு இருக்­கிறது. அந்த ஆறு பேரும் பல­துறை மருந்­த­கச் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு முன்­க­ளப் பணி­யா­ளர்­கள்.

அதி­பர் ஹலிமா யாக்­கோப்­பி­டம் இருந்து நேற்று அவர்­கள் விரு­து­களைப் பெற்­றுக்­கொண்­டார்­கள்.

இந்தப் பல­துறை மருந்தக அமைப்­பின் 20வது ஆண்­டு­வி­ழா­வை­யொட்டி இஸ்­தா­னா­வில் மெய்­நி­கர் ரீதி­யில் நடந்த நிகழ்ச்­சி­யில் விரு­து­கள் வழங்­கப்­பட்­டன.

டாக்­டர் ரூஃபுஸ் டேனி­யல், 52, திரு­வாட்டி டான் பெக் ஹூன், 50, ஆகி­யோர் அவர்­களில் அடங்­கு­வர்.

கொரோனா கிரு­மிக்கு எதி­ரான போராட்­டத்­தில் துணிச்­ச­லோ­டும் அர்ப்­ப­ணிப்பு உணர்­வோ­டும் செயல்­பட்­ட­தற்­காக அவர்­க­ளுக்கு இந்த விருது வழங்­கப்­பட்­டது.