மோசடிகளில் $3 மி. இழப்பு; போலிஸ் விசாரணையில் 268 பேர்

2 mins read

மோச­டிக்­கா­ரர்­கள் அல்­லது சந்­தே­கத்­துக்கு இட­மான முறை­யில் வங்­கிக் கணக்­கில் இருந்து பணத்தை மாற்றி அனுப்பி இருப்­ப­வர்­கள் என்று கூறப்­படும் 268 பேரை போலிஸ் விசா­ரித்து வரு­கிறது.

அந்­தச் சந்­தேகப்பேர்­வ­ழி­க­ளி­டம் அப்­பா­வி­கள் மொத்­தம் $3 மில்­லி­யன் தொகை­யைப் பறி­கொ­டுத்து இருக்­கி­றார்­கள் என்று போலிஸ் தெரி­வித்­துள்­ளது.

போலிஸ் அதி­கா­ரி­கள் 15 முதல் 73 வரை வய­துள்ள 177 ஆட­வர்­களை­யும் 91 மாதர்­க­ளை­யும் விசா­ரித்து வரு­வ­தாக அறிக்­கை­யில் தெரி­வித்­துள்­ள­னர்.

சந்­தேக நபர்­கள் 542 சம்­ப­வங்­களில் ஈடு­பட்டு இருக்­கி­றார்­கள் என்று நம்­பப்­ப­டு­கிறது. கடன், இணைய வர்த்­த­கம், இணைய காதல் மோச­டி­கள் ஆகி­யவை இத்­த­கைய மோசடி முயற்­சி­களில் அடங்­கும் என்று போலிஸ் அறிக்கை தெரி­வித்­துள்­ளது.

வர்த்­தக விவ­கா­ரத் துறை அதி­கா­ரி­களும் ஏழு போலிஸ் தரை பிரி­வு­க­ளைச் சேர்ந்த அதி­கா­ரி­களும் அக்­டோ­பர் 24 முதல் நவம்­பர் 6ஆம் ­தேதி வரை தீவு முழு­வதும் எடுத்த நட­வ­டிக்­கை­களில் அவர்­கள் பிடி­பட்­ட­னர்.

ஏமாற்­றி­ய­தா­கக் கூறும் குற்­றச்­சாட்­டின் பேரில் யாரா­வது குற்­ற­வாளி என்று தீர்ப்பு அளிக்­கப்­பட்­டால் அவ­ருக்கு 10 ஆண்டு வரை சிறைத் தண்­ட­னையும் அப­ரா­த­மும் விதிக்க முடி­யும்.

பண­மோ­ச­டி­களில் ஈடு­ப­டு­வோ­ருக்கு 10 ஆண்டு வரை சிறை­யும் $500,000 வரை அப­ரா­த­மும் விதக்­கப்­படலாம்.

இணை­யத்­தில் எச்­ச­ரிக்­கை­யு­டன் இருந்­து­கொள்­ளும்­படி பொது­மக்­க­ளுக்­குப் போலிஸ் ஆலோ­சனை தெரி­வித்­துள்­ளது.

மோச­டி­க­ளைத் தவிர்த்­துக்­கொள்­வ­தற்­கான தக­வல்­க­ளைப் பெற பொது­மக்­கள் 1800-722-6688 என்ற எண் மூலம் தொடர்­பு­கொள்­ள­லாம்.

மோசடி பற்றி யாருக்­கா­வது தக­வல் தெரிந்­தால் அவர்­கள் 1800-255-0000 என்ற எண் மூலம் தக­வல் தெரி­விக்­க­லாம்.