மகிழ்ச்சி தரும் விழாக்கால பகிர்வு

மகிழ்ச்சி தரும் விழாக்கால பகிர்வு

2 mins read
5b1a222b-7d85-4d82-bee2-ade4f83a5231
சுவா சூ காங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டோன் வீ (வலமிருந்து 2வது) திருவாட்டி சல்பியா யாக்கோப்புக்கு தீபாவளிப் பலகாரங்களை வழங்குகிறார். இடக்கோடியில் நற்பணிப் பேரவை யின் தலைவர் திரு கே. ராமமூர்த்தி. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

மக்­கள் கழக நற்­ப­ணிப் பேர­வை­யும் 'மெஸ்ரா' எனும் மலாய் நற்­பணிப் பேர­வை­யும் இணைந்து இம்­மா­தம் 1ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை வசதி குறைந்த குடும்­பங்­க­ளுக்­குத் தீபா­வ­ளிப் பல­கா­ரங்­களை வழங்­கு­கின்­றன.

இதன் மூலம் இனங்­க­ளுக்­கி­டை­யி­லான புரிந்­து­ணர்வை மேம்­படும் அதே­வே­ளை­யில், சமூக ஒற்­று­மை­யும் வலுப்­ப­டு­கிறது என்று அவ்­விரு நற்­ப­ணிப் பேர­வை­களும் கரு­து­கின்­றன. அந்த வகை­யில் நேற்று சுவா சூ காங் அவென்யூ 7ல் வசிக்­கும் 200 வசதி குறைந்த குடும்­பங்­க­ளுக்கு அக்­கு­ழுத் தொகுதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் திரு டோன் வீ, நற்­ப­ணிப் பேரவை, மெஸ்‌ரீ ஆகி­ய­வற்­றின் 40 தொண்­டூ­ழி­யர்­களு­டன் இணைந்து 20 தட்­டு­கள் தீபா­வ­ளிப் பல­கா­ரங்­களை வழங்­கி­னார். அவர்­களில் ஒரு­வ­ரான 61 வயது திரு­வாட்டி பவானி வெங்­கட்­ரா­மன், "வாடகை வீடு­களில் வசிக்­கும் வசதி குறைந்த குடும்­பங்­க­ளைச் சேர்ந்­த­வர்­கள் அக்­கம்­பக்­கத்­தா­ரு­ட­னும் அடித்­த­ளத் தலை­வர்­க­ளு­ட­னும் தொடர்­பில் இருக்க வேண்­டும். அப்­போ­து­தான் அவர்­க­ளுக்­குக் கிடைக்­கக்­கூ­டிய உத­வித் திட்­டங்­கள் பற்றி அறிந்­து­கொள்ள முடியும்," என்றார்.

தீபா­வளி நாளன்று தமது அண்டை வீட்­டா­ருக்­காக சமைத்து அவர்­க­ளுடன் உண­வை­யும் தீபா­வ­ளிப் பல­கா­ரங்­க­ளை­யும் பகிர்ந்­து­கொள்­ளப்போவ­தா­க­வும் கூறிய திரு­வாட்டி பவானி, இப்­ப­டித்­தான் தாம் தீபா­வ­ளி­யைக் கொண்­டாடி வரு­வ­தா­க­வும் சொன்­னார். தீபா­வ­ளிப் பல­கா­ரங்­களை விநி­யோ­கித்த பிறகு செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய திரு டோன் வீ, "இப்­ப­டிப்­பட்ட முயற்சி­க­ளின் வழி ஒரு­வர் மற்­ற­வ­ரின் கலாசா­ரத்­தைப் புரிந்­து­கொள்ள முடி­யும்.

"மேலும் விழாக்­கா­லங்­களில் வசதி குறைந்­த­வர்­க­ளின் கொண்­டாட்ட உணர்வு குறை­யக்­கூ­டாது என்ற நோக்­கத்­தில் அவர்­க­ளுக்கு பண்­டி­கைப் பல­கா­ரங்­கள் வழங்­கப்­ப­டு­வ­தால், அவர்­க­ளது கொண்­டாட்ட உணர்­வும் அதி­க­ரிக்­கிறது.

"அனை­வ­ரை­யும் உள்­ள­டக்­கும் இச்­ச­மு­தா­யத்­தில் அவர்­களும் இணைத்­துக்­கொள்­ளப்­ப­டு­வார்­கள் என்ற நம்­பிக்­கை­யும் அவர்­க­ளி­டத்­தில் உதிக்­கிறது," என்­றும் கருத்­து­ரைத்­தார்.

திரு டோன் வீயி­ட­மி­ருந்து தீபா­வ­ளிப் பல­கா­ரங்­க­ளைப் பெற்­றுக்­கொண்ட 87 வயது திரு­வாட்டி சல்­பியா யாக்­கோப், தீபா­வ­ளிப் பல­கா­ரங்­க­ளைப் பெற்­றுக்­கொண்ட பிறகு, முன்பு காலஞ்­சென்ற தமது பஞ்­சாபி கண­வ­ரு­டன் சேர்ந்து தீபா­வ­ளிப் பண்­டி­கை­யைக் கொண்­டா­டி­யதை நினை­வு­கூர்ந்­தார்.

தீபா­வ­ளிப் பல­கா­ரங்­கள் விநி­யோ­கத் திட்­டத்­தில் கிட்­டத்­தட்ட 2,250 வசதி குறைந்த குடும்­பங்­களை எட்ட இலக்குக் கொண்­டி­ருப்­ப­தாக நற்­ப­ணிப் பேர­வை­யின் தலை­வர் திரு கே. ராம­மூர்த்தி தெரி­வித்­தார்.

"குடி­யி­ருப்­பா­ளர்­களை, குறிப்­பாக வசதி குறைந்த குடும்­பங்­களை அடை­வதே மக்­கள் கழ­கத்­தின் முக்­கிய இலக்கு. இத்­திட்­டம் மூலம் விழாக்­கால மகிழ்ச்­சியை அவர்­களி­டத்­தில் ஏற்­ப­டுத்த முடி­வதை நினைத்து நாங்­கள் பெரு­மைப்­ப­டு­கி­றோம்," என்றும் திரு ராமமூர்த்தி கூறினார்.