அரசியல் பன்முகத்தன்மை குறித்து துணைப் பிரதமர் ஹெங்

அரசியல் பன்முகத்தன்மை குறித்து துணைப் பிரதமர் ஹெங்

1 mins read
d9d6c562-3dc8-49c8-8e53-ccba4ecdb35b
-

அர­சி­யல் ரீதி­யாக பன்­மு­கத்­தன்மை வேண்­டும் என்ற விருப்­பம் இங்கு நிரந்­த­ர­மாக இருக்­கும் சாத்­தி­யம் இருந்­தா­லும் பிள­வு­படும் நிலை­யும் ஏற்­பட வாய்ப்­புள்­ள­தாக துணைப் பிர­த­மர் ஹெங் சுவீ கியட் கூறி­யுள்­ளார். நேற்று நடை­பெற்ற மசெக மாநாட்­டுக் கூட்­டத்­தில் இவ்­வாறு பேசி­யி­ருந்­தார்.

நடந்து முடிந்த பொதுத் தேர்­த­லில் அர­சி­யல் பன்­மு­கத்­தன்மை வேண்­டும் என்ற மக்­க­ளின் விருப்­பம் தெளி­வா­கத் தெரிந்­த­தாக அவர் கூறி­னார். இனி வரும் பொதுத் தேர்­தல்­கள், மசெ­க­வுக்கு மேலும் சவால்­மிக்­க­தாக இருக்­க­லாம் என்­றும் அவர் சொன்­னார்.

மசெ­க­வுக்கு மூன்­றில் இரு பங்கு பெரும்­பான்மை கிடைப்­பதை எதிர்க்­கட்­சி­யி­னர் தடுக்­க­லாம் என்­றும் மசெ­கவை முறி­ய­டித்து ஆட்சி அமைக்­க­லாம் என்­றும் மசெ­க­வின் முதல் உத­வித் தலை­மைச் செய­லா­ள­ராக உள்ள திரு ஹெங் குறிப்­பிட்­டார்.

நாட்டை வழி­ந­டத்­தும் உரி­மை­யைக் கட்சி சம்­பா­திக்க வேண்­டும் என்­றும் எத்­த­கைய பாதிப்­பு­கள் ஏற்­ப­ட­லாம் என்று உணர்ந்து கட்சி செயல்­பட வேண்­டும் என்­றும் அவர் அறி­வு­றுத்­தி­னார்.

மற்ற நாடு­களில் பிள­வு­பட்ட அர­சி­யல் நிலை இங்கு வேரூன்­றா­விட்­டா­லும் அத்­த­கைய அழுத்­தங்­கள் ஏற்­படும் சாத்­தி­யம் உண்டு என்று திரு ஹெங் சுட்­டி­னார்.