மின்னிலக்க சுகாதாரம், கல்வித் துறைகளில் தெமாசெக் நாட்டம்

மின்னிலக்க சுகாதாரம், கல்வித் துறைகளில் தெமாசெக் நாட்டம்

2 mins read
12c92cc5-b13f-4d4c-8c19-9e74ce1654a6
திரு ரோஹித் சிப்பாஹிமலானி. படம்: பிசினஸ் டைம்ஸ் -

அர­சாங்க முத­லீட்டு நிறு­வ­ன­மான தெமா­செக் ஹோல்­டிங்ஸ், கொவிட்-19க்குப் பிறகு தென் கிழக்கு ஆசி­யா­வில் சுகா­தா­ரம், கல்­வித் தொழில்­நுட்­பத் துறை­களில் கவ­னம் செலுத்­தும் நோக்­கத்­து­டன் தீவி­ர­மா­கப் பேச்சு நடத்தி­வ­ரு­கிறது.

கொவிட்-19 கார­ண­மாக மின்­னி­லக்­கச் சுகா­தா­ரத் துறை மற்­றும் கல்­விச் சேவை­க­ளுக்­குத் தேவை அதி­க­ரித்­துள்­ளது. ஆகை­யால் இந்­தத் துறை­கள் பக்­கம் தெமா­செக் திரும்பி இருக்­கிறது.

அடுத்த சில ஆண்­டு­களில் இந்­தத் துறை­களில் பெரும் பெரும் நிறு­வ­னங்­கள் தலை எடுப்­ப­தைக் காண­லாம் என்று தெமா­செக்­கின் தென்­கி­ழக்கு ஆசி­யப் பிரி­வுக்­குத் முன்பு தலைமை ஏற்று இருந்த ரோஹித் சிப்­பா­ஹி­ம­லானி தெரி­வித்து இருக்­கி­றார்.

அத்­த­கைய நிறு­வ­னங்­கள் சில­வற்­று­டன் தீவி­ர­மாக பேச்­சு­வார்த்தை நடப்­ப­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டார். தெமா­செக் முத­லீடு செய்­தால் அதில் ஆச்­ச­ரி­யப்­ப­டு­வ­தற்கு ஒன்­று­மில்லை என்­றும் திரு ரோஹித் கூறி­னார். இருந்­தா­லும் திட்­ட­வட்­ட­மான இலக்கு எதை­யும் குறிப்­பிட அவர் மறுத்­து­விட்­டார்.

தென்­கி­ழக்கு ஆசி­யா­வின் மின்­னி­லக்­கப் பொரு­ளி­யல் 2025ஆம் ஆண்­டில் மும்­ம­டங்கு பெருகி அமெ­ரிக்க டாலர் $300 பில்­லி­ய­னுக்­கும் அதிக மதிப்பை எட்­டும் என்று ஓர் ஆய்வு தெரி­விக்­கிறது.

அந்த ஆய்வை கூகல், பைன் & கோ ஆகி­ய­வற்­று­டன் சேர்ந்து தெமா­செக் கூட்­டாக நடத்­தி­யது. ஆய்வு முடி­வு­களை உள்­ள­டக்கி இருக்­கும் ஆண்­ட­றிக்கை கடந்த செவ்­வாய்க்­கி­ழமை வெளி­யி­டப்­பட்­டது.

கணினி வழி வர்த்­த­கம் உள்­ளிட்ட முக்­கி­ய­மான நான்கு துறை­களை அது ஆராய்ந்­துள்­ளது. என்­றா­லும் சுகா­தா­ரத்­துக்­கும் கல்­வித் தொழில்­நுட்­பத்­துக்­கும் முதன்­மு­த­லாக அந்த அறிக்கை ஒரு பிரி­வையே ஒதுக்கி இருக்­கிறது.

கொவிட்-19 கால­கட்­டத்­தில் பிர­தான மின்­னி­லக்க சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புச் செய­லி­க­ளின் புழக்­கம் நான்கு மடங்கு அதி­க­மா­னது. அதே­வே­ளை­யில் முன்­ன­ணி­யில் இருக்­கும் கல்­வித் துறை செயலி­களின் பய­னீடு மூன்று மடங்கு கூடி­யது.

இதன் கார­ண­மாக சுமார் 300 மில்­லி­யன் மக்­கள்­தொ­கையை கொண்ட இந்­தோ­னீ­சியா போன்ற மருத்­து­வர்­கள், மருத்­து­வ­ம­னை­கள் குறை­வாக உள்ள நாடு­களில் அதிக முத­லீ­டு­கள் இடம்­பெற்­றன.

இணை­யம் வழி கல்வி மற்­றும் பயிற்­சி­க­ளைக் கற்­றுத்­த­ரும் இணை­யத்­த­ளங்­களில் அதிக முத­லீ­டு­கள் செய்­யப்­ப­டு­கின்­றன.

இந்­நி­லை­யில், இணை­யம் வழி நடக்­கும் வர்த்­த­கத் துறை, தெமா­செக் நிறு­வ­னத்­தைக் கவ­ரக்­கூ­டிய துறை­யா­கத் தொட­ரும் என்று திரு ரோஹித் தெரி­வித்து இருக்­கி­றார்.

தொடர்ந்து தெமா­செக் நிறு­வ­னத்­திற்கு இணைய வர்த்­த­கம் ஓர் ஈர்ப்பு அம்­ச­மாக இருக்­கும் என்று திரு சிப்­பா­ஹி­ம­லானி குறிப்­பிட்­டார்.