சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத வாகனத்துக்கு மேலும் சலுகை

சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத வாகனத்துக்கு மேலும் சலுகை

2 mins read
41f24ee9-6136-4e59-8ba7-e51d7104fefd
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

விலையில் $25,000 வரை கழிவு; மாசுபடுத்தும் வாகனத்துக்கு $25,000 கூடுதல் செலவு

கரி­மப் புகையை வெளியேற்றாத, சுற்­றுப்­பு­றத்தை மாசுபடுத்­தாத மின்­சார கார்­களை வாங்­கு­வோ­ருக்கு அடுத்த ஆண்டு ஜன­வரி முதல் 2020 டிசம்­பர் 31 வரை மேலும் $5,000 தள்­ளு­படி கிடைக்­கும்.

வாக­னப் புகைக் ­கு­றைப்­புத் திட்­டத்­தின்கீழ் இது கிடைக்­கும்.

அதே கால­கட்­டத்­தில் சுற்­றுச்­சூழலை மாசுப­டுத்­தாத டாக்­சி­களுக்கு உரிய மானி­யம் $7,500 அதி­க­ரிக்­கும்.

தனி­யார் வாக­னங்­கள் வெளியே தள்­ளும் புகை­யைக் குறைத்து அதன் மூலம் சுற்­றுச்­சூ­ழ­லுக்­குச் சாத­க­மாக மாற உரிமையா­ளர்­களை ஊக்­க­மூட்­டு­வது வாக­னப் புகைக்­கு­றைப்­புத் திட்­டத்­தின் நோக்­கம்.

மானி­ய அதி­க­ரிப்பு ஒரு­பு­றம் இருக்க, அதிக புகையை வெளி­யி­டும் வாக­னங்­க­ளுக்கு கூடுதல் கட்டணமாக கார்­க­ளுக்கு $5,000 விதிக்கப்படும். டாக்­சி­க்கு இந்த அதி­க­ரிப்பு $7,500 ஆக இருக்­கும்.

இந்­தப் புதிய அதிக­ரிப்பு இந்த ஆண்டு தொடங்க இருந்­தது. ஆனால் இதற்கு ஏற்ப இத்­து­றை­யி­னர் தயா­ராக வேண்­டும் என்­ப­தால் இது 2021 ஜூலை­யில்தான் தொடங்­கும். 2022 டிசம்ர் 31 வரை நடப்­பில் இருக்­கும்.

தேசிய சுற்­றுப்­புற வாரி­ய­மும் நிலப்­போக்­கு­வ­ரத்து ஆணை­யமும் கூட்டு அறிக்­கை­யில் இந்த விவ­ரங்­க­ளைத் தெரி­வித்­தன.

வாக­னங்­களில் உள்­ளெரி இயந்­தி­ரங்­களை (பெட்­ரோல், டீச­லில் இயங்­கும் வாக­ன­ங்கள்) 2040க்குள் கட்­டம் கட்­ட­மாக அகற்­றி­விட வேண்­டும் என்று சிங்­கப்­பூர் இலக்கு நிர்­ண­யித்­துள்­ளது. இந்த இலக்கை நிறை­வேற்ற இப்­பு­திய நட­வடிக்­கை­கள் உத­வும் என்று அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்ளனர்.

சுற்­றுப்­பு­றத்தை அசுத்­தப்­ப­டுத்­தாத மின்சார கார்­கள் போன்ற வாக­னங்­க­ளுக்கு அதிக தள்­ளு­படி இருக்­கும் என்­ப­தால் அவர்­கள் விலை­யில் மொத்­தம் $25,000 தள்­ளு­படி ெபற­லாம்.

அசுத்­தப்­ப­டுத்­தும் வாக­னங்­களுக்கு அதிகக் கட்­ட­ணம் செலுத்த வேண்­டும். ஆகை­யால் இத்­த­கைய வாகனங்­களை வாங்­கு­வோ­ருக்கு $25,000 கூடுத­லாக செல­வா­கும்.

வாக­னப் புகைக்­ கு­றைப்­புத் திட்­டம் 2018ல் நடப்­புக்கு வந்­தது. சிங்­கப்­பூர் சாலை­களில் வாக­னங்­கள் வெளி­யி­டும் கரி­மப் புகை­யைக் குறைப்­பது அதன் நோக்­கம்.

அந்­தத் திட்­டம் ஐந்து தூய்மைக் கேட்டு அம்­சங்­க­ளைப் பொறுத்து வாக­னங்­களை வகைப்­படுத்­து­கிறது. அவற்­றுக்கு ஏற்ப தள்­ளு­படி கிடைக்­கும். அல்­லது அதிக தொகை விதிக்­கப்­படும்.

அந்­தத் திட்­டம் சுற்­றுப்­பு­றத்தை அவ்­வ­ள­வாக மாசுபடுத்­தாத வாக­னங்­களை மக்­கள் வாங்க ஊக்க மூட்டி வந்­துள்­ள­தாக சுற்­றுப்­புற வாரி­ய­மும் நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை­யமும் தெரி­வித்­துள்­ளன.

மின்­சார வாக­னங்­க­ளுக்­கும் பெட்­ரோல், டீசல் வாகன­ங்களுக்கும் இடை­யில் விலை வேறு­பாடு உள்ளது. இது மக்­கள் அத்­த­கைய வாக­னங்­க­ளைத் தேர்ந்து எடுப்­ப­தில் மிக முக்­கிய அம்­ச­மாக இருக்­கிறது. மின்­சார வாக­னங்­க­ளின் விலை அதி­கம்.

இந்­நி­லை­யில் முற்­றி­லும் மின்­சா­ரத்­தில் இயங்­கும் வாக­னத்தை வாங்­கு­வோ­ருக்கு மொத்­தம் $45,000 பணம் மிச்­ச­மா­கும் என்று கணக்­கி­டப்­பட்­டுள்­ளது.

இத­னி­டையே, இரு வகை வாக­னங்­க­ளின் விலை­களும் 2025ல் அல்­லது அதற்கு முன்­பா­கவே ஏறக்­குறைய சம­மான அள­வுக்கு வந்து­வி­டும் என்று போக்­கு­வ­ரத்து அமைச்­சர் ஓங் யி காங் நேற்று தெரி­வித்­தார். சிங்­கப்­பூ­ரில் 2020 ஜன­வரி வாக்­கில் மொத்­தம் 1,125 மின்­சார வாக­னங்­கள் சாலை­களில் ஓடியதாகத் தெரியவந்துள்ளது.