தோ பாயோவில் பேருந்து விபத்து: பேருந்தின் கீழே சிக்கிய பாதசாரி 15 நிமிடம் கழித்து மீட்பு

தோ பாயோ லோரோங் 6, தோ பாயோ ஈஸ்ட் சாலைகளின் சந்திப்பில் கடந்த புதன்கிழமை காலை 10.45 மணியளவில், பொருள்களை டிராலியில் வைத்து தள்ளிக்கொண்டு சென்ற 52 வயது ஆடவர் ஒருவர் பேருந்து விபத்தில் சிக்கி, பேருந்தின் கீழ் முன்புறத்தில் விழுந்தார்.

அந்தச் சமயத்தில் பேருந்து வலதுபுறத்தில் திரும்பிக்கொண்டிருந்தது.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகள் மீட்கும் வரை, சுமார் 15 நிமிடங்களுக்கு அவர் பேருந்தின் கீழ் விழுந்து கிடந்தார்.

மீட்கப்பட்ட அவர், டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

அபாயகரமாக வாகனம் ஓட்டியதற்காக 36 வயது பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.

சம்பவம் குறித்த விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பேருந்தின் கீழிருந்து மீட்கப்பட்ட அவரது கைகள், பாதங்களில் கடுமையான காயம் இருந்ததுபோல தெரிந்ததாக சம்பவ இடத்தில் இருந்தவர்கள் குறிப்பிட்டனர்.

பேருந்தின் முன்பகுதி சேதமடைந்திருந்ததாகக் கூறப்பட்டது.

விபத்தில் சிக்கிய ஆடவருடன் தொடர்புகொள்ள முயற்சி செய்து வருவதாக எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவன தொடர்புகள் மூத்த துணைத் தலைவர் டாம்மி டான் குறிப்பிட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!