சிங்கப்பூர்-ஷண்டோங் இடையே அணுக்கமான பங்காளித்துவம்

சிங்கப்பூர்-ஷண்டோங் இடையே அணுக்கமான பங்காளித்துவம்

1 mins read

வர்த்­த­கம், இணைப்­புத்­தி­றன், நீடித்த நிலைத்­தன்மை, நவீன சேவை­கள் எனப் பல துறை­களில் சிங்­கப்­பூ­ரும் சீனா­வின் ஷண்­டோங் மாநி­ல­மும் ஒத்­து­ழைப்பை வலுப்­ப­டுத்த முடி­யும் என்று வெளி­யு­றவு, போக்­கு­வ­ரத்து மூத்த அமைச்­சர் சீ ஹொங் டாட் தெரி­வித்­துள்­ளார்.

கொவிட்-19 நோய்ப் பர­வல் சூழ­லி­லும் சிங்­கப்­பூர்-ஷண்­டோங் இடை­யி­லான இரு­த­ரப்பு வர்த்­த­கம் குறிப்­பி­டத்­தக்க அளவு அதி­க­ரித்து இருக்­கிறது என்று சிங்­கப்­பூர் - ஷண்­டோங் வர்த்­தக மன்­றத்­தின் இணைத் தலை­வ­ரு­மான திரு சீ கூறி­னார்.

இவ்­வாண்­டின் முதல் ஒன்­பது மாதங்­களில் சிங்­கப்­பூர்-ஷண்­டோங் இடையே $4.86 பில்­லி­யன் அள­விற்கு வர்த்­த­கம் நடந்­துள்­ளது என்­றும் ஆண்டு அடிப்­ப­டை­யில் இது 117% வளர்ச்சி என்­றும் மெய்­நி­கர் முறை­யில் இடம்­பெற்ற 22வது வர்த்­தக மன்­றக் கூட்­டத்­தின்­போது அவர் குறிப்­பிட்­டார்.

ஷண்­டோங் மாநி­லத்­தில் 70 திட்­டங்­களில் சிங்­கப்­பூர் செய்­துள்ள அந்­நிய நேரடி முத­லீடு கடந்த ஆண்­டில் 750 மில்­லி­யன் அமெ­ரிக்க டால­ராக உயர்ந்­தது எனத் தெரிவிக்கப்பட்டது.