உணவு விரயத்தைத் தடுக்கப் புதுவழி

1 mins read
75b1af1f-db4b-48be-b6c5-22bb3c49c9b3
-

'என்டோ இன்­டஸ்ட்­ரிஸ்' என்ற உள்­நாட்டு நிறு­வ­னம், விர­ய­மா­கும் உண­வுப்பொருள்களை விலங்கு உண­வாக மாற்­ற­வும் உர­மாக்கி உள்­ளூர் பண்­ணை­க­ளுக்கு விநி­யோ­கிக்­க­வும் ஒரு வழி­யைக் கண்டு­பி­டித்­துள்­ளது.

அந்த நிறு­வ­னம் ஒரு­வ­கைச் சிற்­றி­னத்­தைச் சேர்ந்த ஈக்­கள், விர­ய­மா­கும் உணவை உண்­ணும்­படி செய்­கிறது.

அதன்­மூ­லம் உரு­வா­கக்­கூ­டிய பொருள் பண்­ணை­களுக்கு மிக முக்­கி­ய­மா­ன­வை­யாக இருக்­கின்­றன.

சிங்­கப்­பூ­ரில் உணவு விர­யம் கடந்த பத்து ஆண்­டு­களில் 30% அதி­க­ரித்­துள்­ளது. 2018ஆம் ஆண்­டில் 736,000 டன் உணவு விர­ய­மா­னது என்று தேசிய சுற்­றுப்­புற வாரி­யம் தெரி­வித்­தது. இது 54,000 ஈர­டுக்­குப் பேருந்­து­க­ளுக்கு நிக­ரா­னது எனத் தெரி­விக்­கப்­பட்டது.