பூந்தோட்ட ஊழியர்களுக்கு புதிய திறன் பயிற்சிகள்

பூந்தோட்ட ஊழியர்களுக்கு புதிய திறன் பயிற்சிகள்

3 mins read
4eb491ca-f149-48e1-bb50-85da262e84ed
கரையோரப் பூந்தோட்டங்களின் ஊழியர்கள் பூங்காவைச் சுற்றி காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள செடிகளுக்கும் மரங்களுக்கும் தண்ணீர் தெளிக்கின்றனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சுற்­றுலா தலத்­தில் உள்ள பல்­வேறு இடங்­க­ளுக்­கான மாறி வரும் மனி­த­வ­ளத் தேவை­க­ளுக்­கேற்ப தங்­களை மாற்­றிக்­கொள்ள ஏது­வாக கரை­யோ­ரப் பூந்­தோட்­டங்­க­ளின் ஊழி­யர்­கள் விரை­வில் திறன் மேம்­பாட்­டுப் பயிற்­சி­க­ளுக்­குச் செல்­ல­வி­ருக்­கின்­ற­னர்.

தொடக்­க­மாக, அந்­தப் பூந்­தோட்­டத்­தின் பல்­வேறு பிரி­வு­க­ளி­லி­ருந்து 120 ஊழி­யர்­கள், வாடிக்­கை­யா­ளர் விவ­கார நிர்­வா­கம், பாது­கா­வல் செயல்­முறை, பய­னீட்­டா­ளர் அனு­ப­வம் போன்ற மற்ற திறன்­களில் பயிற்சி பெறு­வார்­கள்.

பின்­னர் அவர்­கள் அனை­வ­ரும் ஒரே ஊழி­யர் குழு­மத்­தில் சேர்க்­கப்­பட்டு, கொவிட்-19 கொள்ளை நோயின் விளை­வாக அறி­விக்­கப்­பட்ட பய­ணத் தடை­க­ளால் பாதிக்­கப்­பட்ட அந்­தச் சுற்­றுலா தலத்­துக்கு ஏற்ப நீக்­குப்­போக்­கான வகை­யில் பணி­யில் ஈடு­ப­டுத்­தப்­ப­டு­வார்­கள்.

தற்­போது சுற்­றுலா தலச் செயல்­முறை, வரு­கை­யா­ளர் சேவை­, சில்­லறை விற்­பனை மற்­றும் பாது­கா­வல் பிரி­வு­களில் வேலை செய்­யும் இந்த ஊழி­யர்­கள் அடுத்த ஆண்டு ஜன­வரி முதல் ஏப்­ரல் வரை பயிற்­சிக்கு அனுப்­பப்­ப­டு­வார்­கள்.

கரை­யோ­ரப் பூந்­தோட்­டங்­கள் நிறு­வ­னத்­தின் இந்த முயற்­சிக்கு 'ஏஆர்­இயு' எனும் சுற்­றுலா தலங்­கள், பொழு­து­போக்கு மற்­றும் கேளிக்­கைத் துறை ஊழி­யர் சங்­கம் ஆத­ர­வ­ளிக்­கிறது.

அந்த ஊழி­யர் சங்­கம், பயி­ல­ரங்­கு­க­ளுக்கு ஏற்­பாடு செய்­வ­து­டன் ஊழி­யர்­க­ளின் பயிற்­று­விப்­பா­ளர்­க­ளை­யும் நிய­மிக்­கும்.

கரை­யோ­ரப் பூந்­தோட்­டங்­கள் நிறு­வ­னத்­துக்­கும் ஊழி­யர் சங்­கத்­துக்­கும் இடை­யி­லான செயல்­முறை மற்­றும் தொழில்­நுட்­பம் தொடர்­பான நீண்­ட­கா­லத் திட்­டத்­தின் ஒரு பகுதி­ யாக இந்­தப் பயிற்சி ஏற்­பாடு அமை­கிறது.

அதற்கு அடுத்த கட்­டத்­தில், தற்­போது வெளிப்­பு­றத் தோட்­டங்­க­ளைப் பரா­ம­ரித்­தல் அல்­லது பசுமை வனப்பு ஆய்வு போன்ற பணி­க­ளைச் செய்­யும் 21 பசுமை வனப்பு ஊழி­யர்­கள் பயிற்­சிக்கு அனுப்­பப் படு­வார்­கள்.

அதன் பிறகு அவர்­கள் அனை­வ­ரும் பசுமை வனப்­புத் துறை­யில் உள்ள பல்­வேறு பணி­க­ளைச் செய்ய தயா­ராக இருப்­பார்­கள்.

கரை­யோ­ரப் பூந்­தோட்­டங்­கள் வளா­கத்­தில் தற்­போது 370 ஊழி­யர்­கள் வேலை செய்­கி­றார்­கள்.

"கொவிட்-19 பாதிப்பு கார­ண­மாக எங்­கள் சுற்­றுலா தலம் மறு ­உ­ரு­வா­கத்­தில் கவ­னம் செலுத்தி, எங்­கள் வர்த்­தக மாதி­ரி­யைப் புதுப்­பிக்க வேண்­டும்," என்­றார் கரை­யோ­ரப் பூந்­தோட்­டங்­கள் நிறு­வ­னத்­தின் துணைத் தலைமை நிர்­வாக அதி­காரி திரு லீ கொக் ஃபாட்.

"இப்­போது எங்­கள் சுற்­றுலா தலத்­துக்கு வரு­வோர் அனை­வ­ரும் வார­யி­று­தி­யில் வரும் சிங்­கப்­பூ­ரர்­கள். அவர்­க­ளுக்கான பாது­காப்பு நிர்­வாக நட­வ­டிக்­கை­களுக்கு உகந்த சேவை வழங்குவதும் இதில் அடங்கும்.

"வார நாட்­கள் என்று பார்த்­தால் எங்­க­ளுக்­குப் புதிய தேவை­கள் உண்டு. உதா­ர­ணத்­துக்கு, தொலை­பேசி அல்­லது இணைய சேவை­கள் மூவம் விசா­ரிப்­பு­க­ளுக்­குப் பதி­ல­ளித்­தல். இப்­படி வாரம் முழு­வ­துக்­கும் பல்­வேறு தேவை­க­ளைக் கவ­னிக்­கும் வகை­யில் ஊழி­யர்­க­ளைப் பணி­ய­மர்த்த அவர்­க­ளுக்கு வெவ்­வேறு திறன்­கள் இருக்க வேண்­டும்," என்­றும் திரு லீ கூறி­னார்.

கொவிட்-19 கார­ண­மாக மூடப்­பட்­டி­ருந்த கரை­யோ­ரப் பூந்­தோட்­டங்­கள் ஜூலை மாதம் மீண்­டும் திறக்­கப்­பட்­ட­தி­லி­ருந்து வரு­கை­யா­ளர் எண்­ணிக்கை படிப்­ப­டி­யாக உயர்ந்­துள்­ளது. ஜூலை­யில் 360,000 வரு­கை­யா­ளர்­க­ளாக இருந்த அந்த எண்­ணிக்கை கடந்த மாதம் 600,000த் தாண்­டி­யது.

"செயல்­முறை மற்­றும் தொழில்­நுட்­பம் தொடர்­பான நீண்­ட­கா­லத் திட்­டத்தால் கரை­யோ­ரப் பூந்­தோட்­டங்­கள் நிறு­வ­னத்­துக்­கு மட்­டு­மல்­லாது அதன் ஊழி­யர்­க­ளுக்­கும் பல நன்­மை­க­ள் கிடைக்க வாய்ப்பு உள்ளது," என்­றார் நேற்று அங்கு வரு­கை­ய­ளித்த என்­டி­யு­சி­யின் தலை­மைச் செய­லா­ளர் திரு இங் சீ மெங்.