'ஆற்றல்மிகு தடுப்பூசிக்கான ஆதரவு மிக முக்கியம்'

'ஆற்றல்மிகு தடுப்பூசிக்கான ஆதரவு மிக முக்கியம்'

2 mins read
5c7fa01e-1ac9-430d-a312-4d85c9a57788
சிங்கப்பூரின் இரண்டாம் நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங் (இடது), சிங்­கப்­பூ­ரில் உள்ள சவூதி அரே­பி­யத் தூத­ர­கத்­தின் ஏற்­பாட்­டில் நேற்று ஷங்­ரிலா ஹோட்­ட­லில் நடை­பெற்ற நிகழ்ச்சி ஒன்­றில் பேசி­னார். அவருடன் சவூதி அரேபிய தூதர் சால் சாலே அல்-சாலே. படம்:MOF -

இவ்­வார இறு­தி­யில் நடை­பெ­றும் ஜி-20 உச்­ச­நிலை மாநாடு, ஒரு ஆற்­றல்­மிக்க தடுப்­பூ­சி­யைத் தயா­ரிக்­கும் முயற்­சி­யில் இறங்­கி­யுள்ள உலக சுகா­தார நிறு­வ­னத்­துக்­கான ஆத­ரவை மேலும் வலுப்­ப­டுத்­தும் என்று சிங்­கப்­பூர் நம்­பிக்கை கொண்­டி­ருப்­ப­தாக இரண்­டாம் நிதி அமைச்­சர் லாரன்ஸ் வோங் தெரி­வித்­துள்­ளார்.

கல்வி அமைச்­ச­ரு­மான திரு வோங், சிங்­கப்­பூ­ரில் உள்ள சவூதி அரே­பி­யத் தூத­ர­கத்­தின் ஏற்­பாட்­டில் நேற்று ஷங்­ரிலா ஹோட்­ட­லில் நடை­பெற்ற நிகழ்ச்சி ஒன்­றில் பேசி­னார்.

ஜி-20 அமைப்­பில் உல­கின் மேம்­பட்ட மற்­றும் பெரிய பொரு­ளி­யல்­க­ளைக் கொண்ட 19 நாடு­களும் ஐரோப்­பிய ஒன்­றி­ய­மும் அங்­கம் வகிக்­கின்­றன.

இம்­மா­தம் 21ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை மெய்­நி­கர் நிகழ்­வாக இடம்­பெ­ற­வி­ருக்­கும் இந்த ஆண்டு உச்­ச­நிலை மாநாட்­டின் கருப்­பொ­ருள், "அனை­வ­ருக்­கு­மான 21ஆம் நூற்­றாண்­டின் வாய்ப்­பு­களை மெய்­யாக்­கு­தல்" என்­பது.

இந்த உச்­ச­நிலை மாநாடு வெற்றி பெற தனது மூன்று விருப்­பங்­களை திரு வோங் முன்­வைத்­தார்.

"முத­லா­வது, உலக சுகா­தார நிறு­வ­னத்­துக்­கும் கொவிட்-19 கிரு­மிக்கு எதி­ரான தடுப்­பூ­சியை உரு­வாக்க அது எடுத்து வரும் கடும் முயற்­சி­க­ளுக்­கும் உலக அள­வி­லான ஆத­ரவை ஜி-20 அமைப்பு அளிக்க வேண்­டும். அப்­போ­து­தான், உலக அள­வில் தேவைப்­ப­டு­வோர் அனை­வ­ருக்­கும் தடுப்­பூ­சி­கள் கிடைக்க வழி ஏற்­படும்," என்­றார்.

"இரண்­டா­வது, விதி­மு­றை­கள் சார்ந்த பல­த­ரப்­பட்ட வர்த்­தக முறைக்கு ஆத­ர­வ­ளிக்­கும் வகை­யில் ஜி-20 அமைப்பு ஒரு வலு­வான சமிக்­ஞையை அனுப்ப வேண்­டும். அதன் மூலம் சந்­தை­கள் திறக்­கப்­பட்டு, விநி­யோ­கத் தொடர்­ கட்­டிக்­காக்­கப்­படும். அத்­தி­யா­வ­சிய மருத்­து­வப் பொருட்­கள் கிடைக்­க­வும் இடை­யூ­று­க­ளைக் குறைக்­க­வும் பொரு­ளி­யல் மீட்சி மேம்­ப­ட­வும் அதன் மூலம் சாத்­தி­ய­மா­கும்.

"மூன்­றா­வது, பசு­மை­யான அதிக காலம் நீடிக்­கக்­கூ­டிய உலக பொரு­ளி­யலை மறு­நிர்­மா­ணம் செய்ய ஜி-20 அமைப்­பின் தலை­வர்­கள் கூட்டு உடன்­பாட்­டில் கையெ­ழுத்­திட வேண்­டும்," என்­றும் அமைச்­சர் வோங் குறிப்­பிட்­டார்.

"கொவிட்-19 தடை­கள் இருந்­தும், கடந்த ஆண்டு டிசம்­ப­ரில் ஜி-20 அமைப்­பின் தலை­மைத்­து­வப் பொறுப்பை ஏற்­றுக்­கொண்ட சவூதி அரே­பியா, கொள்­ளை­நோயை எதிர்­கொள்ள அனைத்­து­லக ஆத­ரவை நாடி­யுள்­ளது.

"மேலும் ஜி-20 அமைப்­பின் உறுப்­பி­னர் அல்­லாத நாடு­களும் இந்த முயற்­சி­களில் பங்­க­ளிக்க அது கேட்­டுக்­கொண்­டுள்­ளது," என்­றும் திரு வோங் விவ­ரித்­தார்.

ஜி-20 அமைப்­பில் சிங்­கப்­பூர் ஓர் உறுப்பு நாடாக இல்­லா­த­போ­தும், உல­க­ளா­விய ஆளு­மைக் குழு­வின் (3ஜி) ஒருங்­கி­ணைப்­பா­ளர் என்ற முறை­யில் அது ஜி-20 அமைப்­பின் கூட்­டங்­களில் பங்­கேற்க அழைக்­கப்­பட்­டுள்­ளது.

3-ஜி அமைப்­பில் புருணை, மலேசியா, பிலிப்­பீன்ஸ், வியட்­னாம், பஹ்­ரேன், கத்­தார், ஐக்­கிய அரபு சிற்­ற­ர­சு­கள், ஃபின்லாந்து, சுவிட்­சர்­லாந்து, நியூ­சிலாந்து உட்பட 30 நாடு­கள் அங்­கம் வகிக்­கின்­றன.

"சவூதி அரே­பி­யா­வின் தலை­மை­யில் ஜி-20 அமைப்பு ஒரு வலு­வான, சரி­ச­ம­மான பொரு­ளி­யல் மீட்­சிக்கு வழிகாட்டும்," என்றும் திரு வோங் தெரிவித்தார்.