'சிங்கப்பூரில் சவால்களை எதிர்கொள்ள பொறியாளர்கள் தேவை'

2 mins read
eac36fec-d812-4a26-bf6d-de2be6a05cd8
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

அடுத்த 10 ஆண்­டு­களில் வேளாண், உண­வுத் துறை­யில் பல புதிய வேலை­கள் உரு­வாக்­கப்­ப­ட­வுள்ள நிலை­யில், செயல்­முறை கட்­டுப்­பாடு, தானி­யக்­கம், இயந்­தி­ர­வி­யல் போன்­ற­வற்­றில் நிபு­ணத்­து­வம் உடைய பொறி­யா­ளர்­கள் தேவைப்­படு­கின்­ற­னர்.

தேசிய பொறி­யா­ளர்­கள் தினத்தை முன்­னிட்டு நேற்று நடை­பெற்ற நிகழ்ச்சி ஒன்­றில் பேசிய நீடித்த நிலைத்­தன்மை, சுற்­றுப்­புற அமைச்­சர் கிரேஸ் ஃபூ, நீடித்த நிலைத்­தன்­மைக்கு எதிர்­கா­லத்­தில் பொறி­யி­யல் தீர்­வு­கள் தேவைப்­படுவதா­கக் கூறி­னார்.

"வெள்­ளத் தடுப்பு அரண்­களை அமைப்­பது, அதிக திறன் கொண்ட சூரிய ஒளித் தக­டு­களை உரு­வாக்கு­வது, மின்­சார வாக­னங்­களை மின்­னூட்­டம் செய்­யும் உள்­கட்­ட­மைப்பு வச­தி­க­ளை ஏற்படுத்துவது போன்­ற­வற்றை செய்ய பொறி­யி­யல் தீர்­வு­களை நாம் நாடு­கி­றோம்," என்­றார் அவர்.

இந்த நிகழ்ச்சி இணை­யம் வழி­யாக நடை­பெற்­றது. புக்­கிட் திங்கி ரோட்­டில் உள்ள சிங்­கப்­பூர் பொறி­யா­ளர்­கள் கழக வளா­கத்­தில் திரு­வாட்டி ஃபூ உரை­யாற்­றி­னார்.

இளை­யர்­க­ளி­டையே பொறி­யி­யல் துறை மீது ஆர்­வத்தை ஏற்­படுத்­தும் இந்த வரு­டாந்­திர நிகழ்ச்சி, இம்­மா­தம் 12ஆம் தேதி தொடங்­கி­யது. இவ்­வாண்­டிற்­கான 'பொறி­யி­யல் புத்­தாக்க சவால்' போட்­டி­யின் வெற்­றி­யா­ளர்­கள் நேற்று அறி­விக்­கப்­பட்­ட­னர். நிஜ உல­கில் பல்­வேறு விவ­கா­ரங்­களுக்குப் பொறி­யி­யல் தீர்­வு­க­ளைக் கண்டு­பி­டிக்க 101 மாண­வர் குழுக்­கள் போட்­டி­யிட்­ட­ன.

போட்­டி­யின் வெற்­றி­யா­ளர்­களுக்கு தங்­க­ளது திட்­டப்­ப­ணி­களை ஆரம்பிக்க, தொடக்க நிதி வழங்­கப்­படும்.

"நமது ஊட்­டச்­சத்து தேவை­யில் நாம் தற்­போது 10 விழுக்­காட்­டிற்­கும் குறை­வாக தயா­ரிப்­ப­தால், உள்­ளூர் உண­வு உற்பத்தியைத் துரி­தப்­ப­டுத்த தொழில்­நுட்­பத்­தைப் பயன்­ப­டுத்­து­வது மேலும் அவ­சி­ய­மா­கிறது," என்று அமைச்­சர் ஃபூ தமது உரை­யில் கூறி­னார்.

பொறி­யி­யல் துறை­யில் செயற்கை நுண்­ண­றி­வைப் (ஏஐ) பயன்­ப­டுத்­து­வது குறித்து மூன்று உடன்­பா­டு­கள் நிகழ்ச்­சி­யில் கையெ­ழுத்­தா­கின. அவற்­றில் இரு உடன்­பா­டு­கள், சிங்­கப்­பூ­ரின் முதல் செயற்கை நுண்­ண­றிவு பொறி­யி­யல் மையத்தை அமைப்­ப­தில் கவ­னம் செலுத்­தும். மேலும், பொறி­யா­ளர்­களுக்­கான கற்­றல், மேம்­பாட்­டுத் திட்­டங்­களை அமைப்­ப­தற்­கும் அவ்­விரு உடன்­பா­டு­கள் பங்­க­ளிக்­கும்.

ஏஐ சிங்­கப்­பூர், எஸ்­எம்­ஆர்டி நிறுவனம் ஆகி­ய­வற்­றுக்கு இடையே கையெ­ழுத்­தான மூன்­றா­வது உடன்­பாடு, பல்­வேறு செயற்கை நுண்­ண­றி­வுத் திட்­டங்­களில் கவ­னம் செலுத்­தும்.