உலகநாதன் ஜெயகுமார் என்ற 42 வயது வெளிநாட்டு ஊழியர் உள்ளூர் கட்டுமானக் குத்தகை நிறுவனம் ஒன்றில் பணியாற்றிக்கொண்டிருந்த காலத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21ஆம் தேதி விபத்து ஏற்பட்டது. அதில் அவருக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டன. இரண்டு கால்களும் முட்டிக்கு மேல் துண்டிக்கும் நிலை ஏற்பட்டது. தற்பொழுது அவர் இயந்திர சக்கரநாற்காலியின் துணைகொண்டு வாழ்ந்து வருகிறார்.
தனக்கேற்பட்ட கடுமையான காயங்களுக்காக ஊழியர் இழப்பீடு சட்டத்தின்கீழ் அவர் முன்வைத்த கோரிக்கையை ஆராய்ந்த மனிதவள அமைச்சு அவருக்கு சேர வேண்டிய இழப்பீட்டுத் தொகையை $125,362.80ஆக மதிப்பீடு செய்தது.
இதை ஏற்காத உலகநாதன் பணியின்போது ஏற்பட்ட விபத்து காரணமாக தனக்கு ஏற்பட்ட காயங்களுக்காக கிம் போக் கான்டிரேக்டர் பிரைவெட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் மீது வழக்கு தொடுத்தார்.
நீதிமன்ற ஆவணங்களின்படி, ரிபப்ளிக் ெபாலிவார்ட் என்ற இடத்தில் மரங்களையும் அவற்றின் கிளைகளையும் வெட்டும் பணியில் உலகநாதன் ஈடுட்டிருந்தது தெரியவந்துள்ளது.
மரங்களும் அவற்றின் கிளைகளும் வெட்டப்பட்டு, பட்டையால் இறுக்கிக் கட்டப்பட்டு, லாரியில் பாரந்தூக்கி மூலம் ஏற்றப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. பின்னர், மரக்கிளைகளில் கட்டப்பட்டிருந்த பட்டையை அவிழ்க்குமாறு உலகநாதனிடம் கூறப்பட்டது.
அந்த சமயம் உலகநாதன் கட்டி வைக்கப்பட்டிருந்த மரக்கிளைகளின் மேலிருந்துள்ளார். இந்த சமயம் பார்த்து மரக்கிளைகளில் ஒன்று சரிந்தது. உலகநாதனும் தன்னிலை தவறி லாரியிலிருந்து கீழே விழுந்தார். மற்றொரு மரக்கிளை சரிந்து உலகநாதன் மீது பலமாக விழ அவருடைய இரண்டு கால்களும் சிதைந்தன.
உலகநாதன் சார்பில் இந்த வழக்கை ஏற்று நடத்திய ஹோ லா கார்ப்பரேஷன் சட்ட நிறுவனம் சம்பவ இடத்திற்குச் சென்று அங்கிருந்து எவ்வாறு மரக்கிளைகள் லாரியில் ஏற்றப்பட்டன, அதில் உலகநாதன் உட்பட கிம் போக் கான்டிரேக்டர் பிரைவெட் நிறுவனம் எவ்வாறு தனது ஊழியர்களை ஈடுபடுத்தியது என்பது போன்ற விவரங்களை புகைப்படங்கள் மூலமாகவும் காணொளி மூலமாகவும் சேகரித்தது.
இதன் அடிப்படையில் அது கிம் போக் நிறுவனத்தின் வழக்கறிஞர்களுடன் நீண்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உலகநாதனுக்கு இழப்பீட்டு தத்ொகையாக $410,000 பெற்றுத் தந்துள்ளது. இதைப் பெற்றுக்கொண்டு உலகநாதன் தற்பொழுது இந்தியாவுக்கு திரும்பியுள்ளார்.
விபத்துகள் குறித்த அனைத்து விதமான வழக்குளையும் சிறப்புறக் கையாளும் ஹோ லா கார்ப்பரேஷன் சட்ட நிறுவனம் இந்த துைறயில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் 2021ஆம் ஆண்டின் சிறந்த சட்ட நிறுவனங்களுக்கான சிறந்த தரவரிசைப் பட்டியலில் முதலிடம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.
குடும்ப நல சட்டம், ஊழியர் பணி நியமன சட்டம் ஆகியவற்றிலும் முதலிடத்தில் உள்ளது.
கடந்த 1991ஆம் ஆண்டு திரு ஹோ சின் சா என்பவரால் மிடில் ரோட்டில் சிறிய நிறுவனமாகத் தொடங்கப்பட்ட ஹோ லா கார்ப்பரேஷன் நிறுவனம், இன்று சிங்கப்பூரின் அதிகமான கிளைகளைக் கொண்ட நிறுவனமாக வளர்ந்துள்ளது. இந்நிறுவனம் தனது 10வது கிளையை அண்மையில் உட்லண்ட்சில் திறந்துள்ளது.