இணைய வர்த்தகத்தைப் பொறுத்த வரை ஜிஎஸ்டி வரிக்கு வியாபாரிகள் பதிய வேண்டும் என்பது சட்டம் ஆகும்.
அந்தச் சட்டத்தின்கீழ் முதன் முதலாக நேற்று ஒருவர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டது. $11,000 செலுத்தும்படி அவருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
எட்வின் பாங் சுங் ஜி, 40, (படம்) என்ற அந்த ஆடவர் ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் ஒரு குற்றச்சாட்டின் பேரில் குற்றத்தை ஒப்புக்கொண்டார். அவருக்கு $4,000 அபராதமும் விதிக்கப்பட்டது.
தண்டனை விதிக்கப்பட்டபோது இதர நான்கு குற்றச்சாட்டுகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன.
குற்றவாளியான பாங், நொடித்துப்போனவர் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.


