மத்திய சேம நிதிக் கழகம் வழங்கும் விளம்பரச் செய்தி
மத்திய சேம நிதிச் சேமிப்பும் நீங்களும்
பெரும்பான்மை சிங்கப்பூரர்கள் அதிக ஆண்டுகள் உயிர்வாழும் தற்போதைய சூழலில், உங்கள் ஓய்வுக்காலத்தின்போது உங்கள் மத்திய சேம நிதி (மசேநி) சேமிப்பு உங்களுக்கு - குறிப்பாக அடிப்படைத் தேவைகள் முதல் சுகாதார, வீட்டுச் செலவுகள் வரை எவ்வாறு உதவும்? இதோ உங்களது கேள்விகள் சிலவற்றுக்கான பதில்கள்!
அனைத்துச் சேமிப்புகளையும் எனது 55 வயதில் ஏன் திரும்பப் பெற முடியாது?
கடந்த 65 ஆண்டுகளுக்கு முன்னர் மசேநி எனப்படும் மத்திய சேம நிதித் திட்டம் தொடங்கப்பட்டபொழுது, சிங்கப்பூரரின் வாழ்நாள் 60 வயது என மதிப்பிடப்பட்டது. மசேநி சேமிப்புகளை ஒருவர் தமது 55 வயதில் முழுமையாகத் திரும்பப் பெற முடிந்தாலும் அது அவர்களுக்கு சில ஆண்டுகளுக்கு மட்டுமே நீடித்து உதவியது. இன்று 65 வயது அடைந்துள்ள இரண்டு சிங்கப்பூரர்களில் ஒருவர் 85 வயதுக்கு மேலும் மூன்று சிங்கப்பூர்களில் ஒருவர் 90 வயதுக்கு மேலும் வாழ்வதை எதிர்பார்க்கலாம். மேம்பட்ட வாழ்க்கைத் தரமும் மருத்துவத் தொழில்நுட்பமும் இளம் சிங்கப்பூரர்களின் வாழ்நாளை மேன்மேலும் நீட்டிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. தங்களது முதுமைக் காலத்தில், அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் சிங்கப்பூரர்களிடம் போதிய சேமிப்பு இருப்பதை உறுதிப்படுத்த நாங்கள் உதவ விரும்புகிறோம்.
1. இந்த இலக்கினை அடைவதற்காக, ஓய்வுக்காலம், வாழும் வீடு, மருத்துவத் தேவைகள் ஆகியவற்றை கருத்தில்கொண்டு உங்கள் மசேநி சேமிப்பு திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் வேலையில் இருந்து ஓய்வு பெறும்பொழுது மருத்துவச் செலவுகளை ஈடுகட்டவும் வாழ்கின்ற வீடு போன்ற சொத்துக் கடன்கள் முழுமையாக செலுத்தப்படவும் வாழ்நாள் முழுதும் ஓய்வூதியம் பெறவும் இந்தத் திட்டம் உதவும்.
2. நீங்கள் 55 வயதை எட்டும்பொழுது உங்கள் ஓய்வுக் காலத் தேவைகளுக்கு ஆதரவாகச் சிறப்புக் கணக்கில் இருந்தும் (Special Account -SA) சாதாரண கணக்கில் இருந்தும் (Ordinary Account - OA) ஒரு பகுதி ஒதுக்கி வைக்கப்படுகிறது. வழங்குதொகைக்குத் தகுதிபெறும் வயதை நீங்கள் எட்டும்போது, இந்தச் சேமிப்புகள் ஓய்வுக் கால அடிப்படைத் தேவைகளுக்கு ஆதரவளித்திட மாதந்தோறும் தொடர்ந்து வழங்கப்படும்.
3. உங்களின் மெடிசேவ் சேமிப்பு மருத்துவத் தேவைகளுக்கானது. நீங்கள் 55 வயதை எட்டிய பிறகும் இத்தகைய சேமிப்புகளை உங்களின் தனிப்பட்ட மருத்துவச் செலவுகளுக்கும் உடனடி குடும்ப உறுப்பினர்களின் மருத்துவத் தேவைகளுக்கும் பயன்படுத்தலாம்.
வேலையிலிருந்து ஓய்வுபெறும்பொழுது எனக்கு மசேநி எவ்வாறு உதவுகிறது?
நாம் எத்தனை காலம் வாழ்ந்தாலும் இறுதிவரை மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட வழங்குதொகையைப் பெறுதல் நமக்கு ஓய்வுக்காலத்தில் நிம்மதி தரும் ஒன்றாகும். அதே வேளையில் அவசர காலத்திற்கென பணம் தேவைப்படும் சூழ்நிலைகள் ஒருவருக்கு ஏற்படலாம். மசேநி திட்டம் இந்த இரு தேவைகளையும் பூர்த்தி செய்கின்றது. வேலை செய்யும் காலத்தில் மசேநி உறுப்பினர்கள் மசேநி கணக்கிற்கு நிதி வழங்குவதால் மட்டுமே இந்தத் திட்டம் முழுமையாக இயங்க முடிகிறது. இதனால் ஓய்வுக்காலச் சேமிப்பும் வளர்கிறது.
வாழ்நாள் இறுதிவரை மசேநி எவ்வாறு நிதி வழங்குகிறது?
மசேநி லைஃப் (CPF LIFE) என்ற நீண்ட வாழ்நாள் காப்புறுதித் திட்டம், நீங்கள் வாழும் நாள் வரை ஓய்வுக்காலத்தில் சேமிப்பு இன்றித் தவித்திடாமல் மாதாந்திர தொகையைப் பெறுவதற்கு வழிவகுக்கிறது. மசேநி உறுப்பினர் ஒருவர் தமது 65ஆம் வயதில் மசேநி லைஃப் (CPF LIFE) என்ற இந்தத் திட்டத்தில் சேர்ந்துகொண்டவுடன் மாதாந்திர வழங்குதொகை வழங்கப்படும்.
ஓய்வுக்காலத்தில் மொத்த தொகையாகப் பெறுவதற்கு மசேநி எவ்வாறு வகை செய்கிறது?
பொதுவாக, நீங்கள் 55 வயதை எட்டியதும் பின்வருவனவற்றில் எது அதிகமோ அதை மொத்த தொகையாகப் பெற முடியும்.
1. $5,000; அல்லது
2. உங்கள் முழு ஓய்வுக்கால சேமிப்புக் கணக்கில் (Cohort Full Retirement Sum - CFRS) உள்ள தொகையை இருப்பில் வைத்த பின்னர் மீதம் இருக்கும் சாதாரண, சிறப்பு மற்றும் ஓய்வுக்கால சேமிப்பில் (Ordinary, Special and Retirement Account - OSRA) உள்ள பணத்தை நீங்கள் பெறலாம்; அல்லது
3. நீங்கள் 95 வயது வரை குத்தகைக்கு இருக்கக்கூடிய சொத்துக்கு உரிமையாளராக இருந்தால், உங்கள் அடிப்படை ஓய்வுக்காலச் சேமிப்புக் கணக்கில் (Cohort Basic Retirement Sum - CBRS) உள்ள தொகையை இருப்பில் வைத்த பின், சாதாரண, சிறப்பு மற்றும் ஓய்வுக்காலச் சேமிப்பில் (Ordinary, Special and Retirement Account - OSRA) உள்ள பணத்தைப் பெறலாம்.
4. அடிப்படை, முழு மற்றும் மேம்படுத்தப்பட்ட ஓய்வுக்காலத் தொகையைப் பற்றிய வேறுபாடுகளை பின்வரும் இணைப்பை அணுகி அறிந்துகொள்ளுங்கள்:
மத்திய சேம நிதி தொடர்பில் உங்களுக்கு ஏதாவது கேள்விகள் உள்ளனவா?
‘முரசிடம் கேளுங்கள்’ என்ற புதிய கேள்வி-பதில் தொடருடன் எங்களோடு இணைக.
கேள்விகளை tamilmurasu@sph.com.sg எனும் இணைய முகவரிக்கு அனுப்புங்கள்.