ஈஸ்வரன்: அரசு-மக்கள் இடையே இருவழித் தொடர்பு அவசியம்

ஈஸ்வரன்: அரசு-மக்கள் இடையே இருவழித் தொடர்பு அவசியம்

2 mins read
bc3e0da9-e0e7-42d1-90c0-2a21af2db2a7
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

பொது­மக்­க­ளின் அக்­க­றை­க­ளைக் கண்­ட­றிய அரசு-மக்­கள் இடையே இரு­வ­ழித் தொடர்பு அவ­சி­யம் என்று தொடர்பு, தக­வல் அமைச்­சர் எஸ். ஈஸ்­வ­ரன் தெரி­வித்­துள்­ளார். மக்­க­ளின் கருத்­து­களை கேட்­கா­மல் அர­சாங்­கம் முடிவு எடுக்­கக்­ கூ­டாது என்­றார் அவர்.

அர­சாங்­கத்­தின் கருத்து சேக­ரிப்­புப் பிரி­வான ரீச்­சின் மேற்­பார்­வைக் குழு உறுப்­பி­னர்­க­ளுக்­கான நிய­ம­னத்­தை­யொட்டி நேற்று நடத்­தப்­பட்ட நிகழ்ச்­சி­யின்­போது அமைச்­சர் இந்­தக் கருத்தை வலி­யு­றுத்­தி­னார். அர­சாங்­கம்-பொது­மக்­க­ளி­டையே இரு­வ­ழித் தொடர்­பின் அவ­சி­யத்­துக்­கான இரண்டு கார­ணங்­களை அவர் விளக்­கி­னார்.

"ஒரு புறம் அர­சாங்­கம் அடை­யா­ளம் கண்­டுள்ள முக்­கிய விவ­கா­ரங்­கள் உள்­ளன. அதே சம­யத்­தில் எந்­தெந்த விவ­கா­ரங்­கள் குறித்து நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­பட வேண்­டும் என்­பதை பொது­மக்­க­ளி­ட­மி­ருந்து கேட்­ட­றிய வேண்­டும். பொது­மக்­க­ளின் அக்­க­றை­க­ளைப் பற்றி தெரிந்­து­கொள்ள இரு­வ­ழித் தொடர்பு தேவை," என்று அமைச்­சர் ஈஸ்­வ­ரன் தெரி­வித்­தார்.

கொவிட்-19 நெருக்­க­டி­நி­லை­யின்­போது ரீச் ஆற்­றிய பங்கு குறித்து அமைச்­சர் ஈஸ்­வ­ரன் மேற்­கோள்­காட்­டி­னார். பாது­காப்­பான தூர இடை­வெளி விதி­முறை நடப்­பில் உள்ளபோ­தி­லும் சிங்­கப்­பூர் மக்­களின் கருத்­து­க­ளைப் பெற தொழில்­நுட்­பத்தை ரீச் பயன்­ப­டுத்­தி­யதை அவர் சுட்­டி­னார்.

மின்­னி­லக்க அணு­கு­மு­றை­யைப் பயன்­ப­டுத்தி ஆய்­வு­களை இணை­யம் வழி நடத்­திய ரீச், இவ்­வாண்­டில் 56,000 சிங்­கப்­பூ­ரர்­க­ளின் கருத்­து­க­ளைச் சேக­ரித்­துள்­ளது. இணை­யம் மூலம் ரீச் நடத்­திய ஆய்­வு­களில் கொரோனா நெருக்­க­டி­ நி­லை­யால் பாதிக்­கப்­பட்ட துறை­க­ளைச் சேர்ந்­த­வர்­களும் அடங்­கு­வர்.

கொவிட்-19 சூழல் கார­ண­மாக நேருக்கு நேர் நடை­பெ­றும் கலந்­து­ரை­யா­டல்­க­ளுக்கு அனு­மதி இல்லை. இந்­நி­லை­யில், நெய்­நி­கர் கலந்­து­ரை­யா­டல்­களை நடத்­து­வ­தன் மூலம் பொது­மக்­க­ளின் கருத்­து­கள் தொடர்ந்து பெறப்­ப­டு­வதை ரீச் உறுதி செய்­துள்­ள­தாக அமைச்­சர் ஈஸ்­வ­ரன் கூறி­னார்.

"சூழ்­நி­லைக்கு ஏற்ப புதிய உத்­தி­களை நாம் கடைப்­பி­டிக்க வேண்­டும். ரீச் கடைப்­பி­டித்த மெய்­நி­கர் கருத்­த­ரங்கு, ஹைபி­ரீட் அணு­கு­மு­றை­கள் இதற்கு நல்ல உதா­ர­ணங்­க­ளாக அமை­கின்­றன. இத்­த­கைய அணு­கு­முறை கொவிட்-19 நெருக்­க­டி­நி­லை­யு­டன் முடிந்­து­வி­டக்­கூ­டாது. இது புதிய, துடிப்­பு­மிக்க தள­மாக இருப்­ப­தால் கொவிட்-19 நெருக்­க­டி­நி­லைக்­குப் பிற­கும் தொடர வேண்­டும்," என்­றார் அமைச்­சர் ஈஸ்­வ­ரன்.

இரண்டு ஆண்­டு­க­ளுக்கு ஒரு­முறை ரீச்­சின் மேற்­பார்­வைக் குழு மாற்­றி­ய­மைக்­கப்­ப­டு­கிறது. தற்­போது அதில் 39 உறுப்­பி­னர்­கள் உள்­ள­னர்.

அவர்­களில் 27 பேர் புதிய உறுப்­பி­னர்­கள். இந்த மேற்­பார்­வைக் குழு 2006ஆம் ஆண்­டில் தொடங்­கி­யது. இதற்கு முன் இல்­லாத அள­வில் இம்­முறை ஆக அதிக உறுப்­பி­னர்­கள் நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

ரீச்­சுக்கு பிர­த­மர் அலு­வ­லக, தேசிய வளர்ச்சி துணை அமைச்­சர் டான் கியெட் ஹாவ் தலைமை தாங்­கு­கி­றார்.

தேசிய தொழிற்­சங்க காங்­கி­ர­சின் (என்­டி­யுசி) உதவி தலை­மைச் செய­லா­ளர் பேட்­ரிக் டே, சுகா­தார அமைச்­சுக்­கான நாடா­ளு­மன்­றச் செய­லா­ளர் ரஹாயு மஸாம், கலா­சார, சமூக, இளை­யர் மற்­றும் சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்­சு­க­ளுக்­கான நாடா­ளு­மன்­றச் செய­லா­ளர் எரிக் சுவா ஆகி­யோர் ரீச்­சின் துணைத் தலை­வர்­க­ளாக இருந்து துணை அமைச்­சர் டானுக்கு உதவி புரி­கின்­ற­னர்.