கணக்கு, அறிவியல் பாடத்தில் சிங்கப்பூர் மாணவர்கள் மீண்டும் முதலிடம்

கணக்கு, அறிவியல் பாடத்தில் சிங்கப்பூர் மாணவர்கள் மீண்டும் முதலிடம்

1 mins read
185d9a12-3bbd-42ed-a265-3299066ac249
(கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்) -

சிங்­கப்­பூர் மாண­வர்­கள் தொடர்ந்து இரண்­டா­வது முறை­யாக அனைத்­து­லக ஆய்வு ஒன்­றில், கணி­தம் மற்­றும் அறி­வி­ய­லில் முத­லி­டம் பெற்­றுள்­ள­னர். 'தி டிரெண்ட்ஸ் இன் இண்­டர்­நே­ஷ­னல் மெத்­த­மேட்­டிக்ஸ் அண்ட் சைன்ஸ் ஸ்டடி' எனப்­படும் இந்த ஆய்வு நான்கு ஆண்­டு­களுக்கு ஒரு­முறை நடத்­தப்­ப­டு­கிறது. நான்­கா­வது, எட்­டா­வது கல்வி நிலை­களில் பயி­லும் மாண­வர்­களை இது சோதிக்­கிறது. அதா­வது, இங்கு தொடக்­க­நிலை 4, உயர்­நிலை 2ல் பயி­லும் மாண­வர்­கள் இதில் பங்­கேற்­ற­னர். இரண்டு நிலை­க­ளி­லும் இரண்டு பாடங்­க­ளி­லும் சிங்­கப்­பூர் மாண­வர்­கள் முத­லி­டம் பிடித்­த­னர். தென்­கொ­ரியா, தைவான், ஜப்­பான் போன்ற நாடு­களைச் சேர்ந்த மாண­வர்­களை அவர்­கள் பின்­னுக்­குத் தள்­ளி­னர்.