மாற்றுப் புரதத் தொழில்முனைவரின் கனவு: விண்வெளி வீரர்களுக்கு நுண்பாசி உணவு

விண்­வெ­ளியை ஆரா­யும்­பொ­ழுது விண்­வெளி வீரர்­களுக்கு நீண்­ட­கா­லத்­திற்­குக் கெட்­டுப் போகாத, சுவை­யான, ஊட்­டச்­சத்­து­மிக்க உணவை வழங்­க­வேண்­டும் என்­பதே தொழில்முனை­வர் யூஜின் வாங்­கின் கனவு. நுண்­பா­சி­க­ளைக் கொண்டு தமது கனவை நன­வாக்குவது இவரது இலக்கு.

அதிக புர­தச்­சத்து கொண்­டு உள்ள தாவ­ர­மான சோயா அவ­ரை­யில் 30% புர­தச்­சத்து இருக்­கிறது. மாறாக, தாதுப்­பொ­ருள்­களும் உயிர்ச்­சத்­து­களும் நிரம்­பிய நுண்­பா­சி­களில் 60% புர­தச்­சத்து இருக்­கிறது.

உயிர்­வி­னைக்­க­ல­னுள் நுண்­பா­சி­களை நொதிக்க வைக்­கும்­பொ­ழுது, மூன்று நாள்­க­ளுக்­குள் அவை உண்­ணத் தகுந்த புர­த­மாக மாறி­வி­டு­கின்­றன. அவற்­றைக் கொண்டு பல்­வேறு தாவர உணவு­ வ­கை­க­ளைத் தயா­ரிக்­க­லாம்.

“சிறிய அள­வி­லான உயிர்­வினைக்­க­லனை வடி­வ­மைத்து, அதை விண்­க­ல­னில் பொருத்­தி­வி­ட­லாம்,” என்­கி­றார் திரு வாங்.

ஆனால், அதற்­கு­முன் சிங்­கப்­பூர் மக்­க­ளுக்கு உண­வ­ளிக்க விரும்­பு­கி­றார் ‘சோஃபிஸ் பயோ­நி­யூட்­ரி­யன்ட்ஸ்’ உண­வுத் தொழில்­நுட்ப நிறு­வ­னத்­தின் தலைமை நிர்­வா­கி­யான திரு வாங்.

நுண்­பா­சி­களை உண்­ணத்­தகுந்த புர­த­மாக மாற்­றும் செயல்­மு­றையை முழு­மை­யாக்­கி­விட்ட அந்­நி­று­வ­னம், ‘அறி­வி­யல் பூங்கா 2’ல் தனது உற்­பத்தி நிலை­யத்தை அமைக்­கத் தயா­ராகி வரு­கிறது. அடுத்த ஆண்டு பிற்­பா­தி­யில் அந்­நி­லை­யம் செயல்­பாட்­டிற்கு வரும்.

மொத்­தம் 464 சதுர மீட்­டர் பரப்­ப­ள­வில் அமை­யும் அந்த உற்­பத்தி நிலை­யத்­தில் 2,000 லிட்­டர் முதல் 20,000 லிட்­டர் வரை­யி­லான உயிர்­வி­னைக்­க­லன்­கள், தெளிப்பு உலர்த்­தி­கள் போன்ற சாத­னங்­களைக் கொண்­டி­ருக்­கும்.

புதிய நிலை­யத்­தில் அமை­யும் 20,000 லிட்­டர் கொள்­ள­ளவு கொண்ட உயிர்­வி­னைக்­க­ல­னில் இருந்து ஒரு மாதத்­திற்கு 10 டன் புரத மாவைத் தயா­ரிக்­க­லாம் என திரு வாங் குறிப்­பிட்­டார்.

“ஒரு டன் சோயா புர­தம் தயா­ரிக்க ஐந்து ஹெக்­டர் நிலம் தேவை. ஆனால், எங்­க­ளுக்கு 0.02 ஹெக்­டர் நிலம் போதும்,” என்­கி­றார் ‘சோஃபிஸ் பயோ­நி­யூட்­ரி­யன்ட்ஸ்’ தலை­மைச் செயல் அதி­காரி பார்­ன­பாஸ் சான்.

‘ஏ ஸ்டார்’ எனும் அறி­வி­யல், தொழில்­நுட்ப, ஆய்வு அமைப்­பின் சிங்­கப்­பூர் உணவு, உயிர்­தொ­ழில்­நுட்ப புத்­தாக்க நிலை­யத்­தில் அமைந்­துள்ள அந்­நி­று­வ­னத்­தின் ஆய்­வ­கத்தை அதி­பர் ஹலிமா யாக்­கோப் நேற்று பார்­வை­யிட்­டார்.

அதற்­குப்­பின் செய்­தி­யா­ளர்­களி­டம் பேசிய அதி­பர் ஹலிமா, “மாற்று உணவு மூலங்­க­ளுக்­கான எல்­லாத் தெரி­வு­க­ளை­யும் ஆராய வேண்­டி­யது அவ­சி­யம். அதன்­மூலம் இன்­னும் பத்­தாண்­டு­க­ளுக்­குள் தனது ஊட்­டச்­சத்து தேவை­யில் 30 விழுக்­காட்டை தானே தயா­ரிக்க வேண்­டும் எனும் இலக்கை சிங்­கப்­பூர் அடைய முடி­யும்,” என்­றார்.

வானிலை, பரு­வ­நிலை மாற்­றங்­களும் கரி­ய­மி­ல­மாயு வெளி­யீட்­டைக் குறைக்க வேண்டி இருப்­ப­தும் பாரம்­ப­ரிய முறைப்­படி மட்­டும் உணவை உற்­பத்தி செய்­வதில் சிர­மத்தை ஏற்­ப­டுத்தி வரு­கின்­றன என்­றும் திரு­வாட்டி ஹலிமா சொன்­னார்.

உணவு மீள்திறன் கொண்ட நாடாக சிங்கப்பூரை மாற்ற உதவ, அதிக மாற்றுப் புரத நிறுவனங்களை அமைப்பதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!