சட்டவிரோத சூதாட்டம்: 2 பேர் கைது; $296,000 பறிமுதல்

சட்டவிரோத சூதாட்டம்: 2 பேர் கைது; $296,000 பறிமுதல்

1 mins read
fc50dc4f-df93-4667-9b45-cc02ff02073e
படம்: சிங்கப்பூர் போலிஸ் படை -

சட்­ட­வி­ரோத, தொலை­தூர சூதாட்­டக் கும்­ப­லைச் சேர்ந்த இரு­வர் கைது செய்­யப்­பட்டு உள்­ள­னர். அவர்­க­ளி­ட­மி­ருந்து $296,000 ரொக்­கப் பண­மும் சூதாட்­டம் தொடர்­பான சாத­னங்­களும் பறி­மு­தல் செய்­யப்­பட்டு உள்­ள­தாக சிங்­கப்­பூர் போலிஸ் படை அதன் அறிக்­கை­யில் தெரி­வித்து உள்­ளது.

கைது செயப்­பட்ட ஆட­வர்­களில் ஒரு­வ­ரின் வயது 39, மற்­ற­வ­ருக்கு 51 வயது. சட்­ட­வி­ரோத தொலை­தூர சூதாட்­டங்­க­ளுக்கு முக­வர்­க­ளாக இவர்­கள் செயல்­பட்டு வந்­த­தாக நம்­பப்­ப­டு­கிறது.

தொலை­தூர சூதாட்­டக் கும்­ப­லைப் பிடிக்­கும் நோக்­கில் கடந்த செவ்­வாய், புதன் ஆகிய இரு நாட்­களில் குற்­றப் புல­னாய்­வுத் துறை அதி­கா­ரி­கள் அம­லாக்க வேட்­டை­யில் ஈடு­பட்­ட­னர்.

பிடி­பட்ட இரு­வ­ரி­ட­மும் தொலை­ தூர சூதாட்­டத் தடைச் சட்­டம் 2014ன் கீழ் விசா­ரணை நடத்­தப்­பட்டு வரு­கிறது.

தொலைத்­தொ­டர்பு சாத­னம் மூலம் வேறி­டத்­தி­லி­ருந்து சூதாட்­டத்தை வழி­ந­டத்­தும் குற்­றத்­துக்கு $5,000 வரை­யி­லான அப­ரா­த­மும் ஆறு மாதங்­கள் வரை­யி­லான சிறைத் தண்­ட­னை­யும் விதிக்­கப்­ப­ட­லாம்.

அதே­போல தொலை­தூர சூதாட்­டத்­தின் தலைமை முக­வ­ராக செயல்­பட்­ட­தா­கக் குற்­றம் சாட்­டப்­ப­டு­வோ­ருக்கு $20,000க்கும் $200,000க்கும் இடைப்­பட்ட அப­ரா­த­மும் ஐந்­தாண்டு வரை­யி­லான சிறைத் தண்­ட­னை­யும் விதிக்­கப்­ப­ட­லாம்.

எனவே எல்லா வகை­யான சட்­ட­வி­ரோத சூதாட்­டச் செயல்­களில் இருந்­தும் விலகி இருக்­கு ­மாறு பொது­மக்­களை போலிஸ் கேட்­டுக்கொண்­டுள்­ளது.