சோறு, தகர டப்பாக்களில் அடைக்கப்பட்ட உணவு உள்ளிட்ட வற்றை விற்கக்கூடிய இயந்திரம் ஒன்று சுவா சூ காங் வட்டாரத்தில் தேவையுள்ள குடியிருப்பாளர்களுக்காக தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இவற்றை வாங்க ஒவ்வொரு மாதமும் 200 குடியிருப்பாளர்
களுக்கு உணவு உதவித்தொகை வழங்கப்படும். உணவு விற்பனை இயந்திரங்களில் அட்டையைப் பயன்படுத்தி வாங்கிக்கொள்ள இந்தத் தொகையை அவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். அந்த அட்டையில் $50 நிரப்பப்பட்டு இருக்கும். இவ்வாறு மாதந்தோறும் $10,000 பெறுமான உதவித்தொகை வழங்கப்படும் என தென்மேற்கு வட்டார சமூக மேம்பாட்டு மன்றம் நேற்று அதன் அறிக்கையில் குறிப்பிட்டது.
புளோக் 813ஏ, சுவா சூ காங் அவென்யூ 7ல் இம்மாதம் 12ஆம் தேதி தொடங்கப்பட்ட இயந்திரம், வசதிகுறைந்த குடியிருப்பாளர்
களுக்கு இலவச உணவு பெறுவதில் உள்ள சிக்கல்களைத் தீர்க்கும் நோக்கம் கொண்டது என அந்த அறிக்கை கூறியது.
இந்த கொவிட்-19 சிரம காலத்தில் பல்வேறு அமைப்புகளும் தனிநபர்களும் ஒன்றிணைந்து மக்களுக்கு உதவ முன்வந்ததாகக் குறிப்பிட்ட தென்மேற்கு வட்டார மேயர் லோ யென் லிங், "நமது சமூக மீற்திறனை வலுப்
படுத்த இதுபோன்று இன்னும் பல பங்காளிகள் முன்வருவார்கள் என எதிர்பார்க்கிறோம்," என்றார்.

