ஊசி கிருமிக்கு, பொருளியலுக்கு அல்ல; மெதுவாகவே மீட்சி

4 mins read
2a61bec0-0c72-4f8c-9fe2-0e9e3c80eef8
-

கொவிட்-19 கிரு­மியை ஒழித்­து­க்கட்ட உல­க­ள­வில் தடுப்­பூசி போடும் இயக்­கம் பிரம்­மாண்­ட­மா­கத் தொடங்­கு­கிறது என்ற செய்தியைக் கேட்டதுமே பன்னாட்டு மக்­க­ளி­டையே முதல் நம்­பிக்கை துளிர்­விட்டு இருப்பதை உணர முடிகிறது.

கொவிட்-19 கிருமிப் பிடியில் இருந்து எப்படித்தான் உலகம் மீளப்போகிறதோ என்று ஒவ்வொரு நாடும் செய்வதறியாது கைபிசைந்து நின்ற நிலையில் குறிப்பிடத்தக்க வரப்பிரசாதமாக தடுப்பூசி செய்தி வெளியாகி இருக்கிறது.

சிங்­கப்­பூர், அமெ­ரிக்கா, ஐரோப்­பிய ஒன்­றி­யம், பிரிட்­டன் முத­லான வளர்ந்த நாடு­களும், இந்­தியா உள்­ளிட்ட பல்­வேறு வள­ரும் நாடு­களும், ஏழை நாடு­களும் தடுப்­பூசி தொடர்­பான நட­வ­டிக்­கை­களைத் தொடங்கி இருக்­கின்­றன.

அமெரிக்காவில் இதுவரை அந்த நாடு காணா அளவுக்கு தடுப்பூசி இயக்கம் தொடங்கிவிட்டது. பிரிட்டனிலும் ஊசி போடப்பட்டு வருகிறது. சிங்கப்பூரில் இந்த மாத முடிவில் மருந்து வந்து சேரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

என்­றா­லும் தடுப்­பூசி மருந்­தைப் பெற்று அவற்றை மக்­க­ளுக்கு போட்டு எதிர்ப்பு சக்­தியை உரு­வாக்கு­வதி­ல் உள்ள ஏராளமான சவால்­கள், கொவிட்-19 கிருமியைச் சமா­ளிக்க பல நாடு­களும் எதிர்­நோக்கும் சவால்­கள் அளவிற்கு அதிகமாக இருக்­கும் என்பதை எல்லா நாடு­களும் உணர்­கின்­றன.

அந்த மருந்தை அதற்­கு­ரிய குறைந்த வெப்­ப­நிலை­யில் பாது­காப்­பது, விநி­யோ­கிப்­பது, தள­வா­டப் போக்­கு­வ­ரத்து வச­தி­கள் முத­லான பல­வும் பல்­வேறு நாடு­க­ளை­யும் ஒப்­பி­டு­கை­யில் பல­த­ரப்­பட்ட நிலை­களில் இருக்­கின்­றன.

இத­னால் எல்லா நாடு­க­ளி­லும் விநி­யோ­கம் சீராக ஒரே வேகத்­தில் இருக்­காது என்றே தெரி­கிறது. தடுப்பு மருந்தை விரும்­பி­னால் நாடு­கள் வாங்கிக் கொள்­ள­லாம் என்­ப­தால் ஒவ்­வொரு நாடும் எப்­படி இதில் செயல்­படும் என்­ப­தை­யும் பொறுத்­தி­ருந்­து­தான் பார்க்கவேண்டி இருக்­கிறது.

இவை எல்­லாம் நடந்து, பெரு­வா­ரி­யான மக்களை கொவிட்-19 தடுப்­பூசி எட்டி, அவர்­க­ளி­டம் எதிர்ப்­பாற்­றலை உரு­வாக்க பல மாத காலங்­கள் பிடிக்கும் என்­ப­தை மறுக்க இயலாது.எப்­படி இருந்­தா­லும் கொரோனா தடுப்­பூசி உலகப் பொரு­ளி­ய­லுக்கு உந்­து­சக்­தி­யாக இருக்­கும். அன்றாட வாழ்க்கை பழைய நிலைக்­குத் திரும்புவதை அந்த ஊசி வேகப்­ப­டுத்­தும் என்­ப­து­தான் இப்போதைக்கு ஒரே நம்­பிக்­கை­யாக இருக்­கிறது.

ஆனால் இப்­ப­டிப்­பட்ட ஒரு நிலை உட­ன­டி­யாக ஏற்­பட்­டு­வி­டும் என்று எதிர்­பார்க்க இய­லாது. கண்டு­பி­டிக்­கப்­பட்டு உள்ள தடுப்­பூசி கொவிட்-19 கிருமிக்கு எதி­ரான தடுப்­பாற்­றலை மனி­தர்­க­ளி­டம் உண்­டு­பண்­ணுமே தவிர அந்த ஊசி நேர­டி­யாக பொரு­ளி­யலை உசுப்­பி­வி­டும் ஆற்­ற­லைக் கொண்­ட­தல்ல.

கொவிட்-19 கார­ண­மாக வர­லாறு காணாத அளவுக்கு உல­கப் பொரு­ளி­யல் பாதிக்­கப்­பட்டு இருக்­கிறது. எந்­த­வொரு நாடும் தப்­ப­வில்லை. இந்த பாதிப்பு எவ்வளவு காலம் நீடிக்­கும் என்­பது திட்ட வட்டமாகத் தெரியவில்லை.

பல நாடு­களும்-வளர்ந்த நாடு­கள்­கூட இன்­ன­மும் பல­வீ­ன­மா­கவே இருந்து வரு­கின்­றன. உல­கப் பொரு­ளி­யல் இந்த ஆண்டு 4.4 விழுக்­காடு சுருங்­கும் என்று அனைத்­து­ல­கப் பண நிதி­யம் கணிக்­கிறது. ஆசி­யப் பொரு­ளி­யல்­கள் 1.7 விழுக்­காடு குறைந்­து­வி­டும் என்­றும் அது கரு­து­கிறது.

வளர்ந்த நாடு­கள், வள­ரும் நாடு­கள் என்று இல்­லா­மல் வேலை­யில்லா விகி­தம் நீடிக்­கும் என்றும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. கொவிட்-19 கார­ண­மாக அடுத்த ஆண்டு வாக்­கில் மேலும் சுமார் 150 மில்லி­யன் மக்கள் ஏழ்மை நிலைக்­குச் சென்­று­விடு­வர்­என்று உலக வங்கி எச்­ச­ரித்து இருக்­கிறது.

ஆசியா­வில் நிறு­வ­னங்­களும் வங்­கி­களும் கடன் போன்ற நெருக்­க­டி­க­ளுக்கு ஆளா­கக் கூடிய ஆபத்து இருக்­கிறது என்று அனைத்­து­லக நிதிக் கழ­கம் என்ற அமைப்பு குறிப்­பிட்டு உள்­ளது.

அநேகமாக அடுத்த ஆண்டில் பொருளியல் ஏறுமுகத்துக்குத் திரும்பிவிடும் என்பதற்கான அறிகுறிகள் ஓரளவுக்கு தெரியவந்து இருக்கின்றன என்றாலும் கொவிட்-19 பாதிப்புகள் நீண்டகாலத்துக்குத் தொடரும் என்றுதான் பல அமைப்புகளும் எச்சரித்து இருக்கின்றன. ஆகை­யால் ஓரி­ரண்டு நாடு­கள் தடுப்­பூசி துணை­யு­டன் கொவிட்-19ஐ ஒழிப்­ப­தில் வெற்றி காண்­பது மட்­டும் வழக்க நிலையை ஏற்­படுத்­தி­விட முடி­யாது என்­ப­து­தான் உண்மை.

குறிப்­பாக மக்­களின் எல்லை கடந்த நட­மாட்­டங்­க­ளைச் சார்ந்­தி­ருக்­கும் சுற்­றுப்பய­ணம் போன்ற துறை­கள் மேம்­பட வேண்­டு­மா­னால் அதற்கு பல நாடு­க­ளின் நில­வ­ரங்­களும் மேம்­பட வேண்­டும் என்பது அவ­சி­யம்.

கொவிட்-19 கிரு­மியைக் கணி­ச­மான அள­விற்கு ஒடுக்­கி­விட்ட சிங்­கப்­பூர், மூன்­றாம் கட்ட தளர்வை நடை­மு­றைப்­ப­டுத்த இருக்­கிறது. தொழில்­துறை வரு­கை­யா­ளர்­க­ளுக்காக பல நாடு­க­ளோடும் தற்கா­லிக பயண ஏற்­பா­டு­க­ளைச் செய்துகொள்ள அது மும்­மு­ர­மாக முயன்று வரு­கிறது. ஆனால் இந்த முயற்­சி­களில் சிங்­கப்­பூர் பெறும் வெற்றி இதர நாடு­க­ளின் நில­வ­ரங்­க­ளை­யும் சார்ந்தே இருக்கும். அந்த நாடுகளிலும் சூழ்நிலைகள் மேம்பட வேண்டும். கொவிட்-19 கிருமியை ஒடுக்குவதில் அவையும் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெறவேண்டும்.

கட்­டுப்­பா­டு­க­ளைத் தளர்த்தி இருக்­கும் பல நாடுகள் மறு­ப­டி­யும் கொவிட்-19 தொற்­றுக்கு ஆளாகி வரு­வ­தைக் காண முடி­கிறது. தற்­கா­லிக பயண ஏற்­பா­டு­கள் கூட முற்­றி­லும் ஆபத்து இல்­லா­தவை என்று கூறி­விட முடி­யாது. ஹாங்­காங்­கில் திடீ­ரென கொரோனா தொற்று மறு­படி­யும் தலை­தூக்­கி­ய­தால் சிங்­கப்­பூ­ருக்­கும் ஹாங்­காங்­கிற்­கும் இடை­யில் தொடங்­க இ­ருந்த தற்­காலிக பயண திட்­டம் கடைசி நேரத்­தில் ஒத்­தி­வைக்­கப்­பட்­டது இங்கு நினை­வு­கூ­ரத்­தக்­கது.

ஆகை­யால் எல்­லா­வற்­றை­யும் கூட்டிக் கழித்துப் பார்க்­கை­யில், கொவிட்-19 தடுப்­பூசி என்­பது மிக­மிக வர­வேற்­கத்­தக்க ஒன்­று­தான் என்­ப­தில் ஐய­மில்லை. ஆனால் பொரு­ளி­யல் மேம்­பட்டு வழக்க நிலை அடுத்த ஆண்டே திரும்­பிவி­டும் என்­ப­தற்கான உத்­த­ர­வா­தம் அத­னி­டம் இல்லை என்­பதே உண்மை.

இது நாம் உட்­பட ஒவ்­வொ­ரு­வ­ரின் கைக­ளி­லும் இருக்­கிறது. கொவிட்-19 கிரு­மியை அலட்­சி­யப்­படுத்­தி­வி­டா­மல் அவ­ர­வ­ருக்­கு­ரிய பொறுப்பைப் பாது­காப்­பு­டன் நிறை­வேற்­றும் பட்­சத்­தில் புதிய தடுப்­பூ­சிக்கு பலம் மேலும் இரண்டு மடங்கு கூடும்.