தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூர் கடற்படையின் முதலாவது தலைவர் ஜஸ்வந்த் சிங் கில் மறைவு

2 mins read
a8bb5edf-39c1-4213-ba41-0729909bcd58
படம்: REBUPLIC OF SINGAPORE NAVY/FACEBOOK -

சிங்­கப்­பூர் கடற்­ப­டை­யின் முத­லா­வது தலை­வ­ரும் சிங்­கப்­பூர் சீக்­கிய சமூ­கத்­தின் தூண்­களில் ஒரு­வ­ரு­மான திரு எஸ். ஜஸ்­வந்த் சிங் கில் (படம்) கடந்த சனிக்­கி­ழமை காலை 10 மணிக்கு கால­மா­னார். அவ­ருக்கு வயது 97.

கடந்த சனிக்­கி­ழமை காலை­அவ­ருக்கு நிமோ­னியா காய்ச்­சல் ஏற்­பட்­டது. அவரை மருத்­து­வ­மனைக்­குக் கொண்டு செல்ல தயார்ப்­ப­டுத்­தும்­போது அவர் வீட்­டி­லேயே மர­ண­முற்­றார்.

திரு ஜஸ்­வந்­துக்கு இரண்டு மகன்­களும் நான்கு மகள்­களும் உள்­ள­னர்.

தமக்கு ஆறு வயது இருக்­கும்­போது திரு ஜஸ்­வந்த் தமது மாமா­வு­டன் இந்­தி­யா­வி­லி­ருந்து சிங்­கப்­பூ­ருக்கு வந்­தார்.

தற்­காப்­புத் துறை­யில் முக்­கிய பொறுப்­பு­களில் பணி­யாற்­றிய திரு ஜஸ்­வந்த், 1963க்கும் 1966க்கும் இடைப்­பட்ட காலத்­தில் இந்­தோ­னீ­சி­யா­வுக்­கும் மலே­சி­யா­வுக்­கும் இடையே நடை­பெற்ற 'கொண்­ஃபி­ரண்­டாசி' போரில் மலே­சியா சார்­பில் போரிட்­டார்.

பிரிட்­டிஷ் படை­கள் 1967ஆம் ஆண்டு சிங்­கப்­பூரை விட்டு வெளி­யே­றிய பிறகு, சிங்­கப்­பூர் கடற்­படை தொண்­டூ­ழி­யர் பிரிவின் தலை­வ­ராக இருந்த திரு ஜஸ்­வந்த், புலாவ் பிளாக்­காங் மத்தி தீவில் உள்ள முகா­மின் தலை­வ­ரா­க­வும், சிங்­கப்­பூர் ஆயு­தப்­படை பயிற்­சிப் பிரி­வின் தலை­வ­ரா­க­வும் தெங்கா மற்­றும் சாங்கி ஆகா­யப்­படை தளங்­க­ளின் தலை­வ­ரா­க­வும் பணி­யாற்­றி­னார்.

லெஃப்டி­னண்ட் கர்­னல் பத­வி­யில் இருந்­த­போது 1972ல் திரு ஜஸ்­வந்த், சிங்­கப்­பூர் ஆயு­தப்­ப­டை­யி­லி­ருந்து ஓய்வு பெற்­றார்.

திரு ஜஸ்­வந்­தின் மறை­வுக்கு நேற்று முன்­தி­னம் தனது ஃபேஸ்புக் பக்­கத்­தில் இரங்­கல் தெரி­வித்த சிங்­கப்­பூர் குடி­ய­ரசு கடற்­படை, திரு ஜஸ்­வந்­தின் உன்­ன­த­ சேவைக்கு கடற்­படை மிகுந்த நன்­றிக் கடன்­பட்­டுள்­ளது என்று குறிப்­பிட்­டி­ருந்­தது.

சிங்கப்பூர் கல்சா சங்கத்தின் தலைவராக 1966 முதல் 1981 வரை சேவையாற்றிய திரு ஜஸ்வந்த், சிங்கப்பூர் சீக்கியர் சமூகத்துக்கு அரும்பணியாற்றினார்.

கொவிட்-19 கொள்­ளை­நோய் கட்­டுப்­பா­டு­கள் கார­ண­மாக திரு ஜஸ்­வந்­தின் இரங்­கல் சேவை 'ஸூம்' வழி நடத்­தப்­பட்­டது. திரு ஜஸ்­வந்­தின் ஆறு பிள்­ளை­களில் ஐவர் சிங்­கப்­பூ­ரில் இல்­லா­த­தால், அவர்­களும் வெளி­நாட்­டி­லி­ருந்து தங்­கள் தந்­தை­யின் இறு­திச் சடங்­கு­களை 'ஸூம்' வழி கண்­ட­னர் என்று திரு ஜஸ்­வந்­தின் உற­வி­ன­ரான 60 வயது திரு கிர்­பால் சித்து கூறி­னார்.