பள்ளி மாணவர்கள் டிரேஸ்டுகெதர் திட்டத்தில் பங்கேற்கும் விதமாக அவர்களுக்கு அந்த சாதனத்தை பள்ளிகள் விநியோகிக்கும் என்றும் அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தற்பொழுது சமூக மன்றங்களில் விநியோகிக்கப்படும் இந்த சாதனத்தின் தொடர்ச்சியாக பள்ளிகளிலும் இவை விநியோகிக்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.
இதன் தொடர்பில் அடுத்த ஆண்டு பிப்ரவரி இறுதிக்குள் ஐந்து மில்லியன் சாதனங்களை விநியோகிக்க அரசு எண்ணம் கொண்டுள்ளதாக திரு விவியன் பாலகிருஷ்ணன் விளக்கினார்.