சுற்றுச்சூழலுக்கு சிறந்த பங்காற்றிய 27 பேருக்கு விருது

சுற்றுச்சூழலுக்கு சிறந்த பங்காற்றிய 27 பேருக்கு விருது

1 mins read
dc41aeb8-1fbf-4ad5-9131-365f5015fae5
'Clear3 Environment' நிறுவனத்தின் நடவடிக்கை மேலாளர் திரு ரவி ராஜசேகரனும் பூச்சி மருந்து நிறுவனமான 'AZantz Services' நிறுவனர் திரு அஸ்லாம் ஷாவும் தேசிய சுற்றுப்புற வாரியத்தின் நட்சத்திர விருது பெற்ற 27 பேரில் இருவர்.படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கைகளில் தொடர்ச்­சி­யாக வலி, வலு­வின்மை இருந்­த­போ­து­தி­லும் அதி­கம் சிர­மமான துப்­பு­ரவு துறை­யில் ரவி ராஜ­சே­க­ரன் சாதா­ரண துப்­பு­ர­வா­ள­ராக தொடங்கி பலரை மேற்­பார்வை பார்க்­கும் நிலைக்கு உயர்ந்­தார்.

அவ­ரது கடின உழைப்பு, மீள்­தி­றன் தன்மை, கற்­றுக் கொள்ள வேண்­டும் என்ற ஆர்வம் ஆகி­ய­வற்­றுக்­காக இவ­ருக்கு தேசிய சுற்­றுப்­புற முகவை நட்­சத்­திர விருதை வழங்கி கௌர­வித்­தது.

இவ­ரை­யும் சேர்த்து மொத்­தம் 27 பேருக்கு நட்­சத்­திர விருது வழங்­கப்­பட்­டது.

"என்­னு­டைய கடந்­த­கால வாழ்க்­கை­யில் என்­னால் இதனை நினைத்­து­பார்த்­தி­ருக்­கக்­கூட முடி­யாது.

"இந்­தத் துறை­யில் நான் நிறைய சாதித்­துள்­ளேன். என்னை மேம்­ப­டுத்­திக் கொள்­ளும் ஆர்­வத்­தில் முடிவே இருக்­காது," என்று திரு ரவி ராஜ­சே­க­ரன் தெரி­வித்­தார்.