ராஃபிள்ஸ் ஹோட்டல், ஜுவல் சாங்கிக்கு சிறந்த சுற்றுலா விருது

1 mins read

ராஃபிள்ஸ் ஹோட்­ட­லும் ஜுவல் சாங்கி விமா­ன­ நி­லை­ய­மும் சிங்­கப்­பூர் சுற்­று­லாத் துறை­யின் தலை­சிறந்த விரு­து­களை வென்­றுள்­ளன.

சென்ற ஆண்­டில் சிறந்த முறை­யில் தொண்­டாற்­றிய தனிப்­பட்­ட­வர்­களும் அமைப்­பு­க­ளு­மாக மொத்­தம் 29 பேர் அங்­கீ­க­ரித்­துச் சிறப்­பிக்­கப்­பட்­ட­னர்.

சிங்­கப்­பூர் பய­ணத்துறைக் கழ­கம் டிசம்­பர் 18ஆம் தேதி ஃபேஸ்புக் பக்­கத்­தில் விருது விவ­ரங்­களை அறி­வித்­தது. சுற்­று­லாத் துறைக்குத் தலை­சி­றந்த தொண்­டாற்­றி­யது; தலை­சி­றந்த கடைத்­தொ­கு­தி­யாக திகழ்ந்­தது; தலை­சி­றந்த கவர்ச்சி இட­மாக விளங்­கி­யது ஆகிய மூன்று பிரி­வு­க­ளி­லும் முதல் பரிசை ஜூவல் சாங்கி பெற்­றது.

ஜுவல் சாங்கி சென்ற ஆண்டு ஏப்­ர­லில் திறக்­கப்­பட்­டது. அதற்குப் பிறகு முதல் ஆறு மாதங்­களில் சுமார் 50 மில்­லி­யன் வரு­கை­யா­ளர்­களை அது கவர்ந்­தது. சென்ற ஆண்டு ஆகஸ்ட்­டில் பிரம்­மாண்ட கொண்­டாட்­டங்­க­ளு­டன் திறக்­கப்­பட்ட ராஃபிள்ஸ் ஹோட்­டல், தலை­சி­றந்த ஹோட்­டல் அனு­ப­வத்­தைக் கொண்ட ஒன்­றாக விருது வழங்கி சிறப்­பிக்­கப்­பட்டு இருக்­கிறது.

சுற்­று­லாத் துறைக்குத் தனிச்­சிறப்­பு­மிக்க தொண்­டாற்­றி­ய­தற்­காக வன­வி­லங்கு ஆலோ­ச­னை­யா­ள­ரான சுப­ராஜ் ராஜ­து­ரைக்கு ஆயுட்­கால சாத­னை­யா­ளர் விருது வழங்கி சிறப்­பிக்­கப்­பட்­டது. வன­வி­லங்கு வல்­லு­ந­ராக 35க்கும் அதிக ஆண்டு காலம் தொண்­டாற்றி இருக்­கும் திரு சுப­ராஜ், சென்ற ஆண்டு அக்­டோ­ப­ரில் மர­ணம் அடைந்­தார்.

இவர் சிங்­கப்­பூ­ரின் சில பசுமை வளங்­க­ளைக் கட்­டிக்­காக்க ஓய்­வின்றி பாடு­பட்டு இருக்­கி­றார் என்று கழ­கம் பாராட்டியது.