கொவிட்-19 விதிமீறல்: அமைச்சு விசாரணை

கொவிட்-19 விதிமீறல்: அமைச்சு விசாரணை

2 mins read
e9a41ee0-d4cc-4ea3-9dc0-fbe14d35a258
அக்டோபர் 3ஆம் தேதி பதிவேற்றம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் இந்தப் புகைப்படம், 13 பேர் ஒருவர் மற்றொருவருடன் நெருக்கமாக நிற்பதைக் காட்டியது. படம்: ஜெஃப்ரி ஸு/இன்ஸ்டகிராம் -

மீடி­யா­கார்ப் ஊடக நிறு­வ­னத்­தைச் சேர்ந்த கலை­ஞர் ஜெஃப்ரி ஸுவின் பிறந்­த­நா­ளைக் கொண்­டா­டு­வ­தற்­காக அவ­ரது இல்­லத்­தில் பலர் ஒன்­று­கூ­டி­ய­தைத் தொடர்ந்து கொவிட்-19 பாது­காப்பு நடை­மு­றை­கள் அத்­து­மீ­றப்­பட்­டி­ருக்­க­லாம் என்ற சந்­தே­கத்­தின் பேரில் இதில் சம்­பந்­தப்­பட்ட மீடி­யா­கார்ப் கலை­ஞர்­கள் மீது விசா­ரணை நடத்­தப்­படு­கிறது. இது­கு­றித்து ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் கேட்ட கேள்­விக்­குப் பதி­ல­ளித்த தேசிய வளர்ச்சி அமைச்சு, இச்­சம்­ப­வம் தனது கவ­னத்­திற்கு வந்­தி­ருப்­ப­தா­க­வும் விசா­ரணை நடத்­தப்­ப­டு­வ­தை­யும் உறு­திப்­ப­டுத்­தி­யது.

"இத்­த­கைய விதி­முறை மீறல்­களை தேசிய வளர்ச்சி அமைச்­சும் மற்ற அர­சாங்க அமைப்­பு­களும் கடு­மை­யா­கக் கரு­து­கின்­றன. பாது­காப்பு இடை­வெளி நடை­மு­றை­களை மீறி­யது கண்­ட­றி­யப்­பட்­டால் சம்­பந்­தப்­பட்­ட­வர்­கள் மீது நட­வடிக்கை எடுக்க தயங்க மாட்­டோம்," என்று அமைச்­சின் பேச்­சா­ளர் கூறி­னார்.

பிறந்­த­நாள் கொண்­டாட்­டத்­தின்­போது கொவிட்-19 விதி­மு­றை­கள் மீறப்­பட்­ட­தைக் காட்­டும் புகைப்­படங்­கள் சமூக ஊட­கங்­களில் வலம் வந்­த­தைத் தொடர்ந்து, ஜெஃப்ரி ஸு உட்­பட மூன்று மீடி­யா­கார்ப் கலை­ஞர்­கள் நேற்று முன்­தி­னம் மன்­னிப்­புக் கோரி­னர்.

அக்­டோ­பர் 3ஆம் தேதி பதி­வேற்­றம் செய்­யப்­பட்­ட­தா­கக் கூறப்­படும் ஒரு புகைப்­ப­டம், 13 பேரும் ஒரு­வர் மற்­றொ­ரு­வ­ரு­டன் நெருக்­க­மாக நிற்­ப­தைக் காட்­டி­யது. அந்­தப் படத்­தில் பிறந்­த­நாள் கேக் ஒன்றை ஸு கையில் வைத்­தி­ருந்­தார்.

அந்தப் படத்­தில் எவ­ரும் முகக்­கவசம் அணி­ய­வில்லை.

அக்­டோ­பர் 3ஆம் தேதி தமது 32வது பிறந்­த­நா­ளைக் கொண்­டா­டிய ஸு, பெரிய ஒன்­று­கூ­ட­லைக் காட்டும் புகைப்­ப­டப் பதிவு ஒன்­றைத் தமது இன்ஸ்­ட­கி­ராம் பக்­கத்­தில் பதி­விட்­ட­தாக ஷின் மின் சீன நாளி­தழ் வாச­கர் ஒரு­வர் அந்த நாளி­த­ழுக்கு நேற்று முன்­தி­னம் தெரி­யப்­ப­டுத்­தி­னார்.

அதன் பிறகு அந்த நாளி­தழுக்கு மீடி­யா­கார்ப் நிறு­வ­னம் அறிக்கை ஒன்றை விடுத்­தது. அதில், தமது நிர்­வா­கத்­தின்­கீழ் ஸு உட்­பட மூன்று கலை­ஞர்­கள் பிறந்­த­நாள் ஒன்­று­கூ­ட­லில் கலந்து­கொண்­டதை உறு­திப்­படுத்­தி­ய­தாக அது கூறி­யது. தங்­க­ளது செயல் குறித்து அந்த மூவ­ரும் வருத்­தம் தெரி­வித்­த­தா­க­வும் தவற்­றுக்­காக அவர்­கள் மன்­னிப்­புக் கூறி­ய­தா­க­வும் அது சொன்­னது.

கொவிட்-19 விதி­மு­றை­களைத் தான் கடு­மை­யா­கக் கரு­து­வ­தா­கக் கூறிய மீடி­யா­கார்ப், தொழில்­முறை ரீதி­யி­லும் தனிப்­பட்ட முறை­யி­லும் அவற்­றைக் கடைப்­பி­டிக்­கு­மாறு தனது கலை­ஞர்­க­ளுக்கு நினைவு­படுத்­தி­யுள்­ள­தா­கச் சொன்­னது.