சீனாவில் 2 சிங்கப்பூரர்களுக்கு மரண தண்டனை; தூதரகம் உதவி

சீனாவில் 2 சிங்கப்பூரர்களுக்கு மரண தண்டனை; தூதரகம் உதவி

2 mins read
a8e9ccd9-710c-44d7-9698-ffea558c74f9
அஸ்­லினா, முகம்­மது யூஸ்ரி இரண்டு பேரும் தங்­கள் பெட்­டி­களுக்­குள் இருந்த 28 மாதர் கைப்­பை­களில் 11 கிலோ போதைப்­பொருளை மறைத்து எடுத்­து­வந்­த­தா­கக் கூறி சீனா­வின் ஷெங்­ஷன் நக­ரில் 2015ல் அவர்­களை அதி­காரி கள் கைது செய்­த­தாக சிஎன்­என் செய்தி நிறு­வ­னம் தெரி­வித்­தது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

போதைப்­பொ­ருள் கடத்­தி­ய­தற்­காக இரண்டு சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்கு சீனா­வில் மரண தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது. அவர்­க­ளுக்கு சீனா­வின் குவாங்சூ நக­ரில் இருக்­கும் சிங்­கப்­பூர் தூதர­கம் உதவி வரு­வ­தாக வெளி­யு­றவு அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

சித்தி அஸ்­லினா ஜுனைடி, 35, என்ற மாதுக்­கும் முகம்­மது யூஸ்ரி முகம்­மது யூசோப், 44, என்ற ஆட­வ­ருக்­கும் இடை­வி­டாமல் தூத­ர­கம் உதவி வரு­கிறது. அந்த இரு சிங்­கப்­பூ­ரர்களுக்­கும் மருத்­துவ உதவி, சட்ட உதவி கிடைக்க தூத­ர­கம் வழி செய்­துள்­ளது.

அண்­மைய நாட்­கள் வரை இரு­வ­ரும் தங்­கள் குடும்­பத்­தா­ரு­டன் தொடர்­பு­கொள்ள தூத­ர­கம் உதவி வந்­துள்­ளது.

அஸ்­லினா, முகம்­மது யூஸ்ரி இரண்டு பேரும் தங்­கள் பெட்­டி­களுக்­குள் இருந்த 28 மாதர் கைப்­பை­களில் 11 கிலோ போதைப்­பொருளை மறைத்து எடுத்­து­வந்­த­தா­கக் கூறி சீனா­வின் ஷெங்­ஷன் நக­ரில் 2015ல் அவர்­களை அதி­காரி கள் கைது செய்­த­தாக சிஎன்­என் செய்தி நிறு­வ­னம் தெரி­வித்­தது.

இரு­வ­ரும் போதைப்பொருள் கடத்­திய குற்­ற­வா­ளி­கள் என்று தீர்ப்பு அளிக்­கப்­பட்டு அவர்­க­ளுக்கு இந்த ஆண்டு ஜூலை­யில் மரண தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

முகம்­மது யூஸ்­ரிக்கு விதிக்­கப்­பட்­டுள்ள தண்­டனை இரண்டு ஆண்­டு­கள் நிறுத்தி வைக்­கப்­பட்டுள்­ளது. அநேக­மாக அவ­ருக்கு மரண தண்­ட­னைக்­குப் பதில் ஆயுள் தண்­டனை கிடைக்க வாய்ப்பு இருக்­கிறது.

அஸ்­லி­னா­வின் இறுதி மேல்­முறை­யீடு நிரா­க­ரிக்­கப்­படும் பட்­சத்­தில் அவ­ருக்கு மரண தண்­டனை உறு­தி­யா­கும் என்று தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.

சீனா­வில் கைதாகி தண்­டனை பெற்­றுள்ள இரு­வ­ரும், சிபு­சர் ஓன்­வூக்கா என்ற ஆட­வ­ரின் வலை­யில் சிக்கி தாங்கள் இந்­தக் கதிக்கு ஆளாகி இருப்­ப­தா­க­வும் தங்­கள் பெட்­டி­களுக்­குள் போதைப்­பொ­ருள் இருந்­தது தங்­க­ளுக்­குத் தெரி­யாது என்­றும் கூறி­வ­ரு­கி­றார்­கள்.

சிபு­சர் ஓன்­வூக்கா என்ப­வர் யார், அவர் எங்கு இருக்­கி­றார் என்­பது தெரி­ய­வில்லை. ஆனால் அவரை அதி­கா­ரி­கள் தனி­யாகக் கையாண்டு வரு­கி­றார்­கள் என்று நீதி­மன்­றப் பத்­தி­ரங்­கள் தெரி­விக்­கின்­றன.

சிங்­கப்­பூ­ரின் மனித உரிமை ஆத­ரவு வழக்­க­றி­ஞர் எம். ரவி, இந்த வழக்­கில் ஆலோ­சனை வழங்கி வரு­கி­றார். இவர் இது பற்றி ஃபேஸ்புக்­கில் வியா­ழக்­கிழமை கருத்து தெரி­வித்­தார்.

சீனா­வில் வழக்­க­றி­ஞரை அமர்த்­து­வது சிர­ம­மா­ன­தாக இருக்கிறது என்றாலும் பொது நல வழக்­க­றி­ஞர் ஒரு­வர் சிங்­கப்­பூ­ரர்­கள் சார்­பில் வாதாட முன்­வந்து இருப்­ப­தா­க­த் திரு ரவி குறிப்­பிட்­டுள்­ளார்.