உணவகத்தில் கைகலப்பு: ஆடவர் கைது

1 mins read
45ffcc9e-a1e4-4d43-861d-316565425f44
'டோமினோ பிட்சா' உண­வ­கத்­தின் ஊழியரை, ஆடவர் ஒருவர் தாக்குவது காணொளியில் பதிவாகி உள்ளது. படம்: இணையம் -

புளோக் 505, வெஸ்ட் கோஸ்ட் டிரை­வில் உள்ள 'டோமினோ பிட்சா' கிளை உண­வ­கத்­தில் கிறிஸ்­மஸ் தினத்­தன்று அங்­குள்ள ஊழி­யர் ஒரு­வ­ரைத் தாக்கி, காயப்­ப­டுத்­தி­ய­­தால் 39 வயது ஆட­வர் ஒரு­வர் கைது செய்­யப்­பட்­டுள்­ளார்.

டிசம்­பர் 25ஆம் தேதி பிற்­ப­கல் 3.39 மணிக்கு நிகழ்ந்த இச்­சம்­ப­வத்­தில் தாக்­கப்­பட்ட அந்த 23 வயது ஊழி­யர் சுய­நி­னை­வு­டன் இங் டெங் ஃபோங் மருத்­து­வ­மனைக்­குக் கொண்டு செல்­லப்­பட்­டார் என்று போலி­சார் தெரி­வித்­த­னர்.

சமூக ஊட­கத்­தில் இடம்­பெற்ற காணொ­ளி­களில் அந்த ஆட­வர், ஊழி­யர் ஒரு­வரை முகத்­தில் குத்­திய பிறகு அவ­ரது தலை­மு­டி­யைப் பிடித்­த­வாறு தரை­யில் அவரை இழுத்­துக்­கொண்டு சென்­ற­தைக் காண முடிந்­தது.

கடை­யின் கண்­கா­ணிப்­புக் கேம­ரா­வில் பதி­வான அந்­தக் காணொ­ளி­யில் டிசம்­பர் 25, பிற்­ப­கல் 3.50 மணி என்று நேரம் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.

காணொளி விளக்கக் குறிப்பில், "டோமினோ உணவு விநியோகிப்பாளர் ஒருவரால் தங்கள் உணவகத்தின் இளம் மேலாளர் தாக்கப்பட்டார். இச்சம்பவம் எங்களின் வெஸ்ட் கோஸ்ட் கிளையில் நடந்தது," என்று எழுதப்பட்டிருந்தது.

அந்தக் கிளைக்கு நேற்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியாளர் சென்று பார்க்கையில், சம்பவத்தில் தாக்கப்பட்ட அந்த மேலாளர் அங்கில்லை என்றும் அதன் தொடர்பில் கருத்துரைக்க அதன் ஊழியர்கள் மறுத்து விட்டனர் என்றும் கூறப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பில் போலிசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.