பொதுப் போக்குவரத்தில் குற்றச்செயல்களை எதிர்த்து செயல்பட்டவர்களுக்கு விருது

பொதுப் போக்குவரத்தில் குற்றச்செயல்களை எதிர்த்து செயல்பட்டவர்களுக்கு விருது

2 mins read
19646ab9-d7d2-418e-b97d-d72af72d30c7
பொது உணர்வு விருதைப் பெற்றுக்கொண்ட 15 பேரில் திரு லீ ஜூன் ஜியே (இடது), திரு சான் ஹெங் வெய் ஆகிய இருவரும் அடங்குவர். படங்கள்: சிங்கப்பூர் போலிஸ் படை -
multi-img1 of 2

பொதுப் போக்­கு­வ­ரத்­தில் பெண்­களின் மானத்­திற்கு இழுக்கு ஏற்­படும் வித­மாக சந்­தேக நபர்­கள் செயல்­பட்­ட­தைக் கவ­னித்த பல்­கலைக்­க­ழக மாண­வர்­கள் இரு­வர், அதில் தலை­யிட்டு அவர்­களை போலி­சா­ரி­டம் பிடித்து கொடுத்­த­தற்­காக அந்த மாண­வர்­க­ளுக்­குப் பொது உணர்வு விருது வழங்­கப்­பட்­டுள்­ளது.

இம்­மா­தம் பொதுப் போக்­கு­வரத்து பாது­காப்பு தள­பத்­தி­ய­த்திடம் (டிரான்ஸ்­காம்) இருந்து இந்த விரு­தைப் பெற்­றுக்­கொண்ட 15 பேரில் திரு லீ ஜூன் ஜியே, 25, திரு சான் ஹெங் வெய், 23, ஆகிய இவ்­வி­ரு­வ­ரும் அடங்­கு­வர்.

பொதுப் போக்­கு­வ­ரத்­தில் நிகழ்ந்த சம்­ப­வங்­கள் தொடர்­பில் போலிஸ் விசா­ர­ணைக்கு உத­வி­ய­தற்­காக அவர்­க­ளுக்கு இந்த அங்கீ­கா­ரம் வழங்­கப்­பட்­டுள்­ளது.

இவ்­வாண்டு மார்ச் 16ஆம் தேதி கூட்­டம் நிறைந்த ரயில் ஒன்­றில் இருந்த திரு லீ, அங்­கி­ருந்த ஆடவர் ஒரு­வர் சந்­தே­கப்­ப­டும்­படி நடந்து­கொண்­ட­தைக் கவ­னித்­தார். ரயிலில் நின்­று­கொண்­டி­ருந்த பெண் ஒரு­வ­ருக்கு அருகே ஆவ­ணப் பெட்டி வைத்து அதை அவர் சரி­செய்து கொண்­டி­ருந்­ததை திரு லீ பார்த்­தார்.

அந்­தப் பெட்­டிக்கு மேலே கைபேசி ஒன்று வைக்­கப்­பட்­டது. பின்­னர் அந்­தப் பெட்­டியை அந்த ஆட­வர் அப்­பெண்­ணின் பாவா­டைக்கு அடி­யில் வைத்­ததை திரு லீ கவ­னித்­தார்.

சிங்­கப்­பூர் நிர்­வா­கப் பல்­கலைக்­கழக மாண­வ­ரான திரு லீ, அந்த ஆட­வரை எதிர்கொண்டு அவ­ரது கைபே­சி­யைப் பார்க்க வேண்­டும் என்று கேட்­டார். அந்­தக் கைபே­சி­யில் அப்­பெண்­ணின் பாவா­டைக்­குள் எடுத்த புகைப்­ப­டங்­களை திரு லீ கண்­டார்.

அந்­தப் படங்­களை அந்­தப் பெண் உறு­திப்­ப­டுத்­தி­யதை அடுத்து, அந்­தச் சந்­தேக ஆட­வரை திரு லீ அதி­கா­ரி­க­ளி­டம் அழைத்­துச் சென்­றார். மெக்­பர்­சன் எம்­ஆர்டி நிலை­யத்­தில் 'டிரான்ஸ்­காம்' அதி­கா­ரி­க­ளி­டம் அந்த ஆட­வரை ஒப்­ப­டைத்து நடந்­தது குறித்து திரு லீ விவ­ரித்­தார்.

பெண் ஒரு­வ­ரின் மானத்­திற்கு இழுக்கு ஏற்­படுத்­தி­ய­தற்­காக அந்த ஆட­வர் கைது செய்­யப்­பட்­டார்.

பொது உணர்வு விருது பெற்ற பின் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் நேற்று பேசிய திரு லீ, "தேசிய சேவை நாட்­களில் நான் போலிஸ் அதி­காரி­யாக இருந்­த­போது, இது­போன்ற குற்­றச்­செ­யல்­களை எதிர்­கொண்டு இருக்கிறேன். எனவே, இச்­சம்­ப­வம் எனக்கு அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­த­வில்லை.

"எனி­னும், இச்­சம்­ப­வத்­தில் அந்த ஆட­வர் எனக்கு ஒத்­து­ழைத்­தது ஆச்­ச­ரி­ய­மாக இருந்­தது," என்று கூறி­னார்.

மற்­றொரு சம்­ப­வத்­தில், சிங்­கப்­பூர் சமூக அறி­வி­யல் பல்­க­லைக்­கழக மாண­வ­ரான திரு சான், இவ்­வாண்டு அக்­டோ­பர் 15ஆம் தேதி ரயி­லில் பய­ணம் மேற்­கொள்ள அங் மோ கியோ எம்­ஆர்டி நிலை­யத்­திற்­குச் சென்­றார். அப்­போது மின்­படி­யில் மாது ஒரு­வ­ரின் பாவா­டைக்கு அடி­யில் ஆட­வர் ஒரு­வர் தமது கைபே­சியை நீட்­டி­யதை திரு சான் கவ­னித்­தார்.

உடனே எம்­ஆர்டி நிலைய ஊழி­யர்­க­ளி­டம் இது­கு­றித்து தெரி­யப்­படுத்­திய திரு சான், அந்­தச் சந்தேக ஆட­வ­ரும் அந்த மாதும் ஏறிய அதே ரயி­லில் ஏறி­னார். நடந்­தது குறித்து அந்த மாதி­டம் திரு சான் விவ­ரித்­தார். பின்­னர் அந்த ஆட­வர் கைது செய்­யப்­பட்­டார்.