போலிஸ் அதிகாரிகளுக்கு காயம் விளைவித்ததாக ஆடவர் மீது குற்றச்சாட்டு

போலிஸ் அதிகாரிகளுக்கு காயம் விளைவித்ததாக ஆடவர் மீது குற்றச்சாட்டு

2 mins read
83fccb6e-285b-4906-ad14-3a176cd433c2
ஜூரோங் ஈஸ்ட் ஸ்திரீட் 24, புளோக் 257ல் உள்ள ஒரு குடியிருப்பில் வைத்து ரயன் அசிரஃப் முகம்மது அஸ்மானை போலிசார் கைது செய்தனர். படம்: சாவ் பாவ் -

போலிஸ் நட­வ­டிக்­கை­யின்­போது காரில் ஏறி தப்­பிய ஆட­வர் மீது நீதி­மன்­றத்­தில் நேற்று குற்­றம் சுமத்­தப்­பட்­டது.

பிணை­யில் வெளி­வந்­த­பின் நீதி­மன்ற விசா­ர­ணைக்கு முன்­னிலை ஆகா­த­தால் ரயன் அசி­ரஃப் முகம்­மது அஸ்­மான், 26, எனும் அந்த ஆட­வர் தேடப்­பட்டு வந்­த­தாக போலிஸ் தெரி­வித்­தது.

கடந்த திங்­கட்­கி­ழமை அதி­காலை­யில் புளோக் 331 புக்­கிட் பாத்­தோக் ஸ்தி­ரீட் 33 அரு­கே­ உள்ள கார் நிறுத்­தப் பூங்­கா­வில் வைத்து போலி­சார் ரயனைக் கைது செய்ய முயன்­ற­னர்.

போலிஸ் அதி­கா­ரி­கள் ரயனை நெருங்­கி­ய­போது அவர் தமது காரில் ஏறி தப்­பிக்க முயன்­றார்.

திரு ரூப­னேஸ்­வ­ரன் ஞான­சுப்­பி­ர­ம­ணி­யம், திரு முகம்­மது இத்லி அலி எனும் அதி­கா­ரி­கள் இரு­வர் ரயனின் வலக்­கை­யைப் பிடித்து இருந்­த­போது, அவர் தனது காரை பின்­னோக்­கிச் செலுத்­தி­ய­தா­கக் கூறப்­பட்­டது.

அப்­போது அப்­ப­கு­தி­யில் நிறுத்­தப்­பட்­டி­ருந்த குறைந்­தது இரு கார்­கள் மீது ரயனின் கார் மோதி­யது. இந்­தச் சம்­ப­வத்­தில் திரு இத்­லி­யும் திரு ரூப­னேஸ்­வ­ர­னும் காய­ம­டைந்­த­னர்.

சம்­ப­வம் குறித்த காணொளி யூடி­யூப் இணை­யத்­த­ளத்­தில் பதி­வேற்­றம் செய்­யப்­பட்­டது.

கண்­கா­ணிப்­புப் படக்­க­ரு­வி­களின் துணை­யு­டன் ரய­னின் இருப்­பி­டத்தை போலி­சார் கண்­ட­றிந்­த­னர். சில மணி நேரத்­திற்­குப் பின் ஜூரோங் ஈஸ்ட் ஸ்தி­ரீட் 24, புளோக் 257ல் உள்ள ஒரு குடி­யி­ருப்­பில் வைத்து போலிஸ் அவ­ரைக் கைது செய்­தது.

ஆயுதம் தொடர்­பான குற்­றச்­சாட்­டு­களை ரயன் ஏற்­கெ­னவே எதிர்­நோக்­கி­யுள்­ளார். தண்­ட­னைக்­கா­லக் குறைப்பு உத்­த­ர­வின்­கீழ் இருந்­தும் அவர் அதனை மீறி ஆயு­தம் தொடர்­பான குற்­றங்­க­ளைப் புரிந்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

அக்­குற்­றச்­சாட்­டு­கள் நிரூ­பிக்­கப்­பட்­டால் ரயன் கூடு­த­லாக 106 நாள்­க­ளைச் சிறை­யில் கழிக்க வேண்­டி­யி­ருக்­கும்.

அவர் மீதான வழக்கு அடுத்த மாதம் 27ஆம் தேதிக்கு ஒத்­தி­வைக்­கப்­பட்டு இருக்­கிறது.

கண்­மூ­டித்­த­ன­மாக நடந்­து­கொண்டு காயம் விளை­வித்த குற்­றச்­சாட்­டு­கள் நிரூ­ப­ண­மா­னால், ஒவ்­வொரு குற்­றத்­திற்கும் அவ­ருக்கு ஓராண்டு வரை சிறை­யும் $5,000 வரை அப­ரா­த­மும் விதிக்­கப்­ப­ட­லாம்.