மணமுறிவு வழக்குகளில் சொத்துகளை மதிப்பீடு செய்ய புது திட்டம்

1 mins read
f6d60c56-e2ae-452a-9c17-9f2f8efa8a37
படம்: லியன்ஹ சாவ்பாவ் -

மண­மு­றிவு வழக்­கு­களில் சம்­பந்­தப்­பட்ட தம்­ப­தி­க­ளி­டையே சொத்­து­க­ளைப் பிரித்­துத் தரு­வது தொடர்­பாக முடி­வெ­டுக்க புதிய திட்­டம் ஒன்று அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

புதிய திட்­டத்­தின்­கீழ் இரு­த­ரப்­பி­ன­ரை­யும் சாராத நிதி நிபு­ணர்­களைக் கொண்ட குழு அமைக்­கப்­படும்.

கண­வன்-மனைவி இரு­வ­ரும் மண­மு­றிவு செய்­து­கொள்ள முடி­வெ­டுத்­துள்ள வழக்­கு­க­ளில்­ மட்டும் இந்த அணு­கு­முறை கடைப்­பி­டிக்­கப்­படும். இந்த அறி­மு­கத் திட்­டம் இவ்­வாண்­டின் முதல் காலாண்­டில் தொடங்­கும்.

அதன்­படி சில மண­மு­றிவு வழக்குகளில் நிதி நிபு­ணர்­க­ளு­டன் குடும்ப நல நீதி­மன்­றம் ஒன்­றி­ணைந்து செயல்­படும்.

மண­மு­றிவு செய்­து­கொள்ள முடி­வெ­டுத்­துள்ள தம்­ப­தி­யர் நிதி தொடர்­பான சர்ச்­சை­களை எதிர்­கொள்­ளும்­போது அவர்­க­ளுக்கு நிபு­ணத்­துவ உதவி கிடைக்க இப்­பு­திய திட்­டம் வழி­வ­குக்­கும் என்று குடும்ப நல நீதி­மன்­ற­மும் சிங்­கப்­பூர் கணக்­கா­ளர் கழ­க­மும் நேற்று தெரி­வித்­தன.

தற்­போது நிதி தொடர்­பான பிரச்­சி­னை­கள் எழும்­போது அவற்றை நீதி­பதி தீர்க்க வேண்­டி­ உள்­ளது.

இத­னால் மண­மு­றிவு வழக்­கு­கள் முடிவதில் தாமதம் ஏற்படுகிறது. இதனால் சம்­பந்­தப்­பட்­ட­வர்­க­ளுக்­குச் செலவு அதி­க­மா­கிறது.

அதுமட்டுமல்லாது, பிரிய முடி­வெ­டுத்­துள்ள கண­வன்-மனைவி இடையே பகைமை உண்­டா­கும் சாத்­தி­யமும் அதி­க­மா­கிறது.

நீதி­பதி தமது முக்­கி­யப் பணி­களில் கவ­னம் செலுத்த புதிய திட்­டம் வகை செய்­கிறது.

"நிதி நிபு­ணர்­க­ளைக் கொண்ட குழு அமைக்­கப்­ப­டு­வ­தால் சொத்து­ க­ளைப் பிரிப்­ப­தில் சர்ச்­சை­கள் ஏற்­ப­டு­வ­தைத் தவிர்க்­க­லாம். இதன்­மூ­லம் துரி­த­மான முறை­யில் நீதி வழங்­கப்­படும்.

மணமுறிவு வழக்குகளுக்குப் புதிய திட்டம் பெரிதும் கை கொடுக்கும் என்று வழக்கறிஞர்கள் சிலர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் தெரிவித்தனர்.