இளம் குடும்பங்கள் பங்கேற்கும் கலந்துரையாடல்கள்

இளம் குடும்பங்கள் பங்கேற்கும் கலந்துரையாடல்கள்

2 mins read
1fe8bc78-caff-4bdd-aff3-2c715718b8c0
கேகே மகளிர் மற்றும் சிறார் மருத்துவமனைக்கு நேற்று வருகை அளித்த பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா (இடமிருந்து 2வது), தாயார் நூர் அஸ்லின்டாவுக்கு பரிசுக்கூடை வழங்கி வாழ்த்து கூறினார். அருகில் நூர் அஸ்லின்டாவின் கணவர் முகம்மது சலிமினும் குழந்தை டூர் சஃபியாவும் உள்ளனர். இடக்கோடியில் மருத்துவமனையின் தலைமை நிர்வாகி பேராசிரியர் அலெக்ஸ் சியா. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

இளம் குடும்­பங்­களை மைய­மா­கக் கொண்ட கலந்­து­ரை­யா­டல் தொடரை அர­சாங்­கம் தொடங்­க­வி­ருக்­கிறது. கொவிட்-19 கொள்­ளை­நோ­யின் விளை­வாக வீட்­டி­லி­ருந்து வேலை செய்­யும் போக்கு பற்­றி­யும் அந்­தப் போக்கு நிரந்­த­ர­மாக அமை­யு­மா­னால் அதை அந்­தக் குடும்­பங்­கள் எவ்­வாறு எதிர்­கொள்­ளும் போன்ற விவ­ரங்­களையும் இந்­தக் கலந்­து­ரை­யா­டல்­கள் கேட்­ட­றி­யும் என்று பிர­த­மர் அலு­வ­லக அமைச்­சர் இந்­தி­ராணி ராஜா தெரி­வித்­தார்.

"இளம் தம்­ப­தி­யி­ன­ருக்குக் கடந்த ஆண்டு மிகுந்த சிர­மத்­தைக் கொடுத்­தது. சிலர் தங்­கள் திரு­மண விழா­வைத் தள்ளி வைத்­த­னர். சிலர் குழந்தை பெற்­றுக்­கொள்­ளும் திட்­டத்தை ஒத்தி வைத்­த­னர்.

"இது­போன்ற பிரச்­சி­னை­கள் பற்­றி­யும் கொள்­ளை­நோய்க்­குப் பிந்­திய காலத்­தில் அவர்­கள் கொண்­டி­ருக்­கும் நம்­பிக்­கை­, தேவை­கள் போன்­றவையும் கலந்­து­ரை­யா­ட­லில் பேசப்­படும்," என்­றும் தேசிய மக்­கள் தொகை மற்­றும் திற­னா­ளர் பிரிவை மேற்­பார்­வை­யி­டும் அமைச் சருமான குமாரி இந்­தி­ராணி, "குடும்­பங்­க­ளுக்கு ஆத­ர­வ­ளிப்­ப­தும் பெற்­றோர்­நிலையை ஊக்­கு­விப்­ப­தும் இந்­தக் கலந்­து­ரை­யா­டல் தொட­ரின் முக்­கிய நோக்­கம்," என்று கூறி­னார்.

"வீட்­டி­லி­ருந்து வேலை செய்­யும் போக்கை விரும்­பும் சிலர் அதில் நீக்­குப்­போக்­குத்­தன்மை உள்­ளது என்­கின்­ற­னர். சிலர் அதை உளைச்­சல்­மி­குந்த ஒன்­றா­கக் கரு­து­கின்­ற­னர்.

"கொவிட் காலத்­துக்கு முன் வீட்­டி­லி­ருந்து வேலை செய்­யும் போக்கு மிக­வும் சிர­ம­மா­னது என்று பல முத­லா­ளி­களும் பல ஊழி­யர்­களும் நினைத்­த­னர். ஆனால் முன்பு முடி­யா­தது என்று நினைத்­தது இன்று புதிய வழக்­க­மாகி விட்­டது. பலர் வீட்­டி­லி­ருந்து வேலை செய்­யும் போக்­குக்­குப் பழகி விட்­ட­னர்.

"தடுப்­பூசி போட்ட பிறகு, எல்­லாம் வழக்­க­நி­லைக்­குத் திரும்­பி­னா­லும், வீட்­டி­லி­ருந்து வேலை செய்­யும் போக்கு மட்­டும் மறை­யாது," என்­றும் தேசிய வளர்ச்சி மற்­றும் நிதி ஆகி­ய­வற்­றின் இரண்­டாம் அமைச்­ச­ரு­மான இந்­தி­ராணி விவ­ரித்­தார். அன்­றாட வாழ்க்­கை­யின் ஓர் அங்­க­மா­கி­விட்ட வீட்­டி­லி­ருந்து வேலை செய்­யும் நீக்­குப்­போக்கு முறை­யில் அர­சாங்­கம் இளம் குடும்­பங்­க­ளுக்கு எவ்­வாறு உதவலாம் என்­பது ஆரா­யப்­படும்.

இந்­தக் கலந்­து­ரை­யா­டல்­கள் வழி இளம் குடும்­பங்­க­ளின் விருப்­பங்­கள், தேவை­கள் என்ன என்­பதை அறிந்­து­கொள்ள நம்­பிக்கை கொண்­டுள்ள அமைச்­சர், இதன் மூலம் அவர்­க­ளுக்கு உத­வும் வகை­யில் அர­சாங்­கம் தனது கொள்­கை­களில் மாற்­றங்­க­ளைச் செய்­ய­வும் புதிய திட்­டங்­க­ளை­யும் அறி­மு­கப்­ப­டுத்­த­வும் முடி­யும் என்­றும் கூறி­னார்.

கேகே மக­ளிர் மற்­றும் சிறார் மருத்­து­வ­ம­னைக்கு நேற்று வரு­கை­ய­ளித்த குமாரி இந்­தி­ராணி பின்­னர் மெய்­நி­கர் வழி உரை­யாற்­றி­னார். மெய்­நி­கர் வழி­யாக நடத்­தப்­ப­ட­லாம் என்று எதிர்­பார்க்­கப்­படும் தொடர் கலந்­து­ரை­யா­டல்­கள் இவ்­வாண்டு முத­லாம் காலாண்­டுக்­குப் பிறகு தொடங்­கும் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.