இணையம் வழியாகத் திரண்ட பெருந்தொகை

இணையம் வழியாகத் திரண்ட பெருந்தொகை

3 mins read
e0b0735a-ff3c-40f0-af1d-3a19375f1846
-

கொள்­ளை­நோய் வாட்­டி­ய­தன் கார­ண­மாக, சுதந்­தி­ரம் பெற்ற 1965ஆம் ஆண்டு முதல் இது­வரை கண்­டி­ராத பொரு­ளி­யல் சரிவை சிங்­கப்­பூர் சந்­தித்­த­போ­தி­லும் சிங்­கப்­பூ­ரர்­க­ளின் நன்­கொடை கடந்த ஆண்­டில் சாதனை அளவை எட்­டி­யது. இணை­யம் வழி­யாக ஏரா­ள­மான நன்­கொ­டை­களை அவர்­கள் அள்­ளிக்­கொ­டுத்து உதவி இருக்­கி­றார்­கள். அந்த வகை­யில் Giving.sg இணை­யத்­த­ளம் கடந்த ஆண்­டில் $84 மில்­லி­ய­னுக்­கும் மேலான நன்­கொ­டை­க­ளைப் பெற்­றது. இது ஒரு சாதனை அள­வான நன்­கொ­டைத் தொகை.

மேலும், கொவிட்-19 கிருமி பற்றி அறி­யப்­ப­டாத 2019ஆம் ஆண்­டில் கிடைத்­த­தைக் காட்­டி­லும் இத்­தொகை இரு­ம­டங்­கிற்­கும் மேல். இந்த நன்­கொடை இணை­யத்­த­ளம், 'என்­வி­பிசி' எனப்­படும் தேசிய தொண்­டூ­ழி­யம் மற்­றும் கொடையாளர் நிலையத்தால் நடத்­தப்­ப­டு­கிறது. சிங்­கப்­பூ­ரில் உள்ள 580க்கும் மேற்­பட்ட அற­நி­று­வ­னங்­கள் நிதித் திரட்­டுக்­காக இத­னைப் பயன்­ப­டுத்­து­கின்­றன.

கொரோனா சூழ்ந்த 2020ஆம் ஆண்­டின் ஜன­வரி 1ஆம் தேதி முதல் டிசம்­பர் 30ஆம் தேதி வரை­யில் $84.4 மில்­லி­யன் நன்­கொடை திரண்­ட­தாக நிலையத்­தின் பேச்­சா­ளர் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் ெசய்­தித்­தா­ளி­டம் தெரி­வித்­தார். இது 2019ஆம் ஆண்­டின் இதே கால­கட்­டத்­தில் $35.8 மில்­லி­ய­னாக இருந்­தது. மேலும், பல்­வேறு அற­நி­று­வ­னங்­களில் இணைந்து தொண்­டூ­ழி­யம் புரி­ய­வும் அதி­க­மா­னோர் முன்­வந்­த­னர். 2019ஆம் ஆண்­டில் 28,200 பேராக இருந்த அந்த எண்­ணிக்கை கடந்த ஆண்­டில் 32,100ஆக உயர்ந்­தது. அதிக கொடை திரண்­டது குறித்து 'என்­வி­பிசி'யின் இயக்­கு­நர்­களில் ஒரு­வ­ரான ஜெஃப்ரி டான் விளக்­கி­னார்.

"தேவை உள்­ளோ­ருக்கு அள்­ளிக்­கொ­டுக்­கும் சிங்­கப்­பூ­ரர்­க­ளின் தாரா­ள­கு­ணம் கொவிட்-19 சூழ­லில் நன்கு வெளிப்­பட்­டது. பொது­மக்­கள், அமைப்­பு­கள், தலை­வர்­கள் என எல்­லா­த் தரப்­பி­ன­ரும் சிர­மப்­படும் மக்­க­ளுக்கு உதவ முன்­வந்­தது எங்­கள் உள்­ளத்­தைக் கவர்ந்­தது.

"கொள்­ளை­நோய் பர­வல் கார­ண­மாக பெரிய அள­வில் மக்­கள் ஒன்­று­கூ­டும் நிகழ்­வு­கள் நடை­பெ­றா­த­தால் அற­நி­று­வ­னங்­கள் நிதித் திரட்­டுக்­காக மாற்று வழி­யைத் தேடி­ய­போது அவர்க­ளுக்கு Give.sg போன்ற இணை­யத்­த­ளங்­கள் உத­விக்­க­ரம் நீட்­டின," என்­றார் அவர்.

அறப்­ப­ணி­க­ளுக்­கும் சிர­மப்­படும் குடும்­பங்­க­ளுக்­கும் உதவ 'ரே ஆஃப் ஹோப்' இணை­யத்­த­ளம் வழி­யா­க­வும் $3.5 மில்­லி­யன் நன்­கொ­டை­களை அளித்­த­னர். இது­வும் 2019ஆம் ஆண்­டைக் காட்­டி­லும் பன்­ம­டங்கு அதி­கம். அந்த ஆண்­டில் இந்த இணை­யத்­த­ளம் $550,000 மட்­டுமே பெற்று இருந்­தது. ஏரா­ள­மான வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்கு கொவிட்-19 தொடர்­பான நிதித் திரட்டு நட­வ­டிக்­கை­க­ளுக்­கும் ஏரா­ளமா­னோர் பெருந்­தன்­மை­யு­டன் உத­வி­ய­தாக 'ரே ஆஃப் ஹோப்' இணை­யத்­த­ளத்­தின் பொது மேலா­ளர் டான் என் கூறி­னார். 'ஃப்ரீ ஃபுட் ஃபார் ஆல்', 'கேர் சிங்­கப்­பூர்' போன்ற நன்­கொடை இணை­யத்­த­ளங்­கள் வழி­யா­க­வும் ஏரா­ள­மா­னோர் உதவி அளித்­த­னர்.

அற­நிதி இரவு விருந்து, நிதித் திரட்டு கோல்ஃப் விளை­யாட்டு போன்­ற­வற்றை நடத்த இய­லா­த­தால் கடந்த ஆண்டு நிதித் திரட்டு நட­வ­டிக்­கை­க­ளுக்­குச் சவா­லாக அமைந்­தது என்று அறப்­பணி மன்­றத்­தின் தலை­வர் ஜெரர்ட் ஈ தெரி­வித்­தார். பல்­வேறு இணை­யத்­த­ளங்­க­ளுக்கு நன்­கொடை வந்து குவிந்­த­ போ­தி­லும் 'லயன்ஸ் பிஃபிரண்­டர்ஸ்' இணைய நன்கொடைக்கு கடந்த ஆண்டு 30 விழுக்­காட்டு நன்­கொடை சரி­வைச் சந்­தித்­தது.

பெரு­ம­ள­வி­லான மக்­கள் திர ளும் கொடி நாள், அறப்­பணி கோல்ஃப் போன்ற நிகழ்­வு­க­ளைச் சார்ந்து அதன் நிதித் திரட்டு நட­வ­டிக்­கை­கள் இருந்­த­தும் சரி­வுக்கு ஒரு கார­ணம் எனச் சொல்­லப்­பட்­டது.