கொவிட்-19 தடுப்பூசிகளைத் தேர்ந்தெடுக்க விரும்புவோருக்கு அது சார்ந்த அட்டை ஒன்று வழங்கப்படும். இதன்மூலமாக அவர்கள் தங்களது தடுப்பூசி பதிவுகளை இணையத்தில் சரிபார்த்துக்கொள்ளலாம் என்று சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் தெரிவித்திருக்கிறார்.
கருத்தாய்வுகளின் மூலமாகவும் மற்ற அரசாங்க முறைகளாலும் பதிலளித்த மக்களில் 60 விழுக்காட்டினர் தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்புவதாகத் தெரிவித்தார். மூன்றில் ஒரு பங்கினர், தாங்கள் முடிவு செய்யும் வரை காத்திருக்கப்போவதாகக் கூறியுள்ளனர்.
தங்களுக்கு விருப்பமான தடுப்பூசிகளை மக்கள் தேர்ந்தெடுக்க முடியாது என்று திரு கான் தெரிவித்தார். எந்தத் தடுப்பு மருந்து போடப்பட்டது, மருந்தின் அடுத்த பகுதிக்கான முன்பதிவுத் தேதிகள் எப்போது, தடுப்பூசி போடப்பட்ட பின்னர் நினைவில் கொள்ளவேண்டிய ஆலோசனைகள் எவை என்று அந்த தடுப்பூசி அட்டையில் இருக்கும் என்று அவர் கூறினார்.
தடுப்பூசிகளுக்கான பதிவுகள் தேசிய நோய் எதிர்ப்புப் பதிவகத்தில் பதிவு செய்யப்படும் என்றார் திரு கான்.