கேளிக்கைக்கூட வாடிக்கையாளர்களுக்கு கொவிட்-19 சோதனை விலக்கு அளிக்கப்படலாம்

கேளிக்கைக்கூட வாடிக்கையாளர்களுக்கு கொவிட்-19 சோதனை விலக்கு அளிக்கப்படலாம்

1 mins read
a515abeb-29c7-4745-b40d-35b74c975402
-

'கேடிவி' என்­னும் பாட்­டுப் பாடி மகி­ழும் கேளிக்­கைக் கூடங்­கள் சில­வற்­றுக்கு, தங்­கள் வாடிக்­கை­யா­ளர்­கள் கொவிட்-19 சோதனை செய்­து­கொள்­வ­தில் இருந்து விலக்கு அளித்து திறப்­ப­தற்கு முன்­னோ­டித் திட்­ட­மாக அனு­ம­தி அளிக்­கப்­ப­ட­லாம் என்று உள்­துறை அமைச்சு தெரி­வித்­தது.

ஆனால், இவ்­வாறு அனு­ம­திக்­கப்­படும் கேளிக்­கைக்­கூ­டங்­கள் சற்று மாறு­பட்ட விதி­மு­றை­க­ளைக் கடைப்­பி­டிக்க வேண்­டும். அதா­வது, அதி­க­பட்­சம் இரண்டு பேர் மட்­டுமே ஒரு குழு­வில் இருக்க வேண்­டும். அத்­து­டன் மது அருந்­தத் தடை விதிக்­கப்­படும் என்­றும் உள்­துறை அமைச்­சின் பேச்­சா­ளர் ஒரு­வர் நேற்று தெரி­வித்­தார். கேடிவி கேளிக்­கைக் கூடங்­கள் கடந்த நவம்­பர் 6ஆம் தேதி மூடப்­பட்டு, பின்­னர் மார்ச் 26ஆம் தேதி, சில கேளிக்­கைக் கூடங்­கள் மூன்று மாத முன்­னோ­டித் திட்­டத்­தின் கீழ் திறக்க அனு­ம­திக்­கப்­பட்­டன.

அப்­போது வாடிக்­கை­யா­ளர்­கள், கொவிட்-19 சோதனை செய்து­கொண்­டி­ருக்க வேண்­டும் என்ற விதி­முறை அறி­விக்­கப்­பட்­டது.