சிங்கப்பூரில் நடைபெறும் உலகப் பொருளியல் கருத்தரங்கு - பங்கேற்பாளர்களுக்கு கடுமையான பரிசோதனை

சிங்கப்பூரில் நடைபெறும் உலகப் பொருளியல் கருத்தரங்கு - பங்கேற்பாளர்களுக்கு கடுமையான பரிசோதனை

2 mins read
e793361a-ef2b-42f3-b634-be70dc4d034b
-

சிங்­கப்­பூர் இவ்­வாண்டு மே மாதம் ஏற்று நடத்­த­வி­ருக்­கும் உலகப் பொரு­ளி­யல் கருத்­தரங்­கில் பங்­கேற்­கும் பேரா­ளர்­க­ளுக்­குக் கடு­மை­யான கொவிட்-19 பரி­சோ­தனை மேற்­கொள்­ளப்­படும்.அவர்­கள் அனை­வ­ரும் சிங்­கப்­பூ­ரின் பொதுச் சுகா­தார விதி­முறை­க­ளுக்கு உட்­பட்டு நடக்க வேண்­டும் என்று வர்த்­தக, தொழில் துணை அமைச்­சர் ஆல்­வின் டான் தெரி­வித்­துள்­ளார்.

பய­ணத்­துக்கு முந்­திய பரி­சோ­தனை, சிங்கப்­பூர் வந்­த­டைந்­த­தும் பரி­சோ­தனை, கருத்­த­ரங்கு நடை­பெ­றும் இடம் மற்­றும் அவர்­கள் செல்­லும் மற்ற இடங்­களில் கடு­மை­யான பாது­காப்பு நிர்­வாக நடை­மு­றை­கள் என கொவிட்-19 தொடர்­பான எல்லா பாது­காப்பு நட­வ­டிக்­கை­க­ளுக்­கும் அவர்­கள் ஒத்­து­ழைப்பு நல்க வேண்­டும்.

"வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து வரும் அவர்­க­ள் மூலம் உள்­ளூ­ரில் சமூக கிரு­மித்­தொற்று ஏற்­ப­டு­வதைக் குறைக்­கும் வகை­யில், உள்­ளூர் சமூ­கத்­தி­னர், நிகழ்ச்­சி­யின் பங்­கேற்­பா­ளர்­கள் ஆகி­யோ­ரு­ட­னான பரி­மாற்­றங்­கள் கட்­டுப்­படுத்­தப்­படும் என்று திரு டான் விவ­ரித்­தார்.

இயோ சூ காங் தனித்­தொ­குதி உறுப்­பி­னர் திரு யிப் ஹோன் வெங், "உலகப் பொரு­ளி­யல் கருத்­த­ரங்கு பங்­கேற்­பா­ளர்­க­ளின் சுகா­தா­ரத் தகுதி உறுதி செய்­யப்­ப­டுமா? ஒரு­வேளை கிரு­மித்­தொற்று நில­வ­ரம் மோச­ம­டைந்து, நாட்­டின் எல்­லை­கள் மூடப்­படும் பட்­சத்­தில் கருத்­த­ரங்கை நடத்­து­வ­தற்கு மாற்று ஏற்­பா­டு­கள் உள்­ளதா?" என்று கேள்­வி­கள் எழுப்­பி­யி­ருந்­தார். அவற்றுக்குப் பதி­ல­ளித்த அமைச்­சர், "குறிப்­பிட்ட பொதுச் சுகா­தா­ரச் தகு­தி­கள், கருத்­த­ரங்­கின் மாற்று ஏற்­பா­டு­கள் ஆகி­யவை பற்றி பரி­சீ­லிக்­கப்­பட்டு வரு­கின்­றன. அப்­போது சிங்­கப்­பூர் மற்றும் உல­கம் முழு­வ­து­மான கொவிட்-19 நில­வ­ரமும் கருத்­தில் கொள்­ளப்­படும்.

"இந்­தக் கருத்­த­ரங்­கில் நாம் மேற்­கொள்­ள­வி­ருக்­கும் சுகா­தா­ரத் தகுதி நடை­மு­றை­கள் சிங்­கப்­பூ­ரில் அடுத்­த­டுத்து நடை­பெ­ற­வி­ருக்­கும் மற்ற நிகழ்ச்­சி­க­ளுக்­கும் ஒரு முன்­னோ­டி­யாகத் திகழும்," என்று விளக்­கி­னார்.

உலகப் பொரு­ளி­யல் கருத்­தரங்கு அமைப்பு கடந்த ஆண்டு டிசம்­ப­ரில் விடுத்த அறிக்­கை­யில், ஐரோப்­பா­வில் உள்ள கொவிட்-19 நில­வ­ரத்­தைத் கருத்­தில் கொண்டு, இவ்­வாண்டு மே மாதத்­தில் சுவிட்­சர்­லாந்­தில் நடை­பெ­ற­வி­ருந்த இந்த வரு­டாந்­திர கருத்­த­ரங்கு சிங்­கப்­பூ­ருக்கு மாற்­றப்­ப­டு­கிறது என்று தெரி­வித்­தது. இந்த வரு­டாந்­திர கூட்­டத்­தில் முன்­னணி அர­சி­யல் தலை­வர்­கள், வர்த்­தக தலை­வர்­கள், கல்­வி­யா­ளர்­கள் போன்­றோர் கூடி, உல­கின் அக்­க­றைக்­கு­ரிய விவ­கா­ரங்­கள் பற்றி விவா­திப்­பார்­கள்.

கடந்த ஆண்டு சுவிட்சர்­லாந்தின் டாவோஸ் நக­ரில் நடை­பெற்ற உலகப் பொரு­ளி­யல் கருத்­தரங்­கில் கிட்­டத்­தட்ட 3,000 பேரா­ளர்­கள் பங்­கேற்­ற­னர். இந்த ஆண்டு மே மாதம் 13 முதல் 16ஆம் தேதி வரை சிங்­கப்­பூ­ரில் நடை­பெ­றும் இந்­தக் கருத்­த­ரங்கு, 2022ல் மீண்­டும் சுவிட்­சர்­லாந்­தில் நடை­பெ­றும். மேலும் பேசிய அமைச்­சர் டான், "இந்­தக் கருத்­த­ரங்­கில் மேலும் பலர் பங்­கேற்­கும் வகை­யில் மெய்­நி­கர் அங்­க­மும் சேர்த்­துக்­கொள்­ளப்­படும்.

"இந்­நி­கழ்ச்­சி­யில் சிங்­கப்­பூர் திற­னா­ளர்­க­ளின் பங்­க­ளிப்பு இருக்­கும் வகை­யில், கருத்­த­ரங்­கின் ஏற்­பாட்­டா­ள­ரான 'பப்­ளி­சிஸ்­லைவ்' நிறு­வ­னம், ஆர்­வ­முள்ள உள்ளூர் நிறு­வ­னங்­க­ளுக்­கும் சேவை வழங்­கு­நர்­க­ளுக்­கும் அழைப்பு விடுக்­கும்.

"கொவிட்-19 கொள்­ளை­நோய்க்கு இடையே, கடு­மை­யான சுகா­தா­ரக் கட்­டுப்­பா­டு­க­ள் நடப்­பில் இருந்­தும் முக்­கி­ய­மான பொரு­ளி­யல், வர்த்­தக நிகழ்ச்­சி­களை சிங்­கப்­பூர் ஏற்று நடத்த முடி­யும் என்று உலக நாடு­க­ளுக்கு எடுத்­து­க்காட்ட இது ஒரு நல்ல வாய்ப்பு," என்­றும் துணை அமைச்சர் ஆல்வின் டான் கூறினார்.