'சிறுவனைக் காப்பாற்றியதே நான் செய்த சிறந்த செயல்'

'சிறுவனைக் காப்பாற்றியதே நான் செய்த சிறந்த செயல்'

2 mins read
b3f65302-ced7-46bd-9bd1-99eae8cb59f3
கட்டடத்தின் மூன்றாவது மாடி வீட்டின் சன்னலுக்கு வெளியே நின்றுகொண்டிருந்த சிறுவனைப் பத்திரமாக மீட்ட திரு தாஸ் டிப்டோ. படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், ஃபேஸ்புக் -
multi-img1 of 2

நேற்று முன்­தி­னம் ஹவ்­காங் ஸ்தி­ரீட் 22 புளோக் 244ன் மூன்­றா­வது மாடி வீட்­டின் சன்­ன­லுக்கு வெளியே நின்­று­கொண்­டி­ருந்த சிறு­வனை பங்­ளா­தேஷை சேர்ந்த ஊழி­யர் திரு தாஸ் டிப்டோ காப்­பாற்­றி­னார்.

பத்­தி­ர­மாக மீட்­கப்­பட்ட அந்­தச் சிறு­வ­னுக்கு ஆறு வயது என்று நம்­பப்­ப­டு­கிறது. சிறு­வ­னைக் காப்­பாற்­றி­யது தமக்கு மன­நி­றை­வைத் தரு­வ­தாக திரு டிப்டோ தெரி­வித்­தார். இதுவே வாழ்­வில் தாம் செய்த மிகச் சிறந்த செயல் என்று அந்த 27 வயது ஆட­வர் பெரு­மி­தத்­து­டன் கூறி­னார்.

சிங்­கப்­பூ­ரில் வேலை செய்­வ­தற்­காக கிட்­டத்­தட்ட எட்டு ஆண்­டு­க­ளுக்கு முன்பு அவர் பங்­ளா­தே­ஷி­லி­ருந்து இங்கு வந்­தார்.

மேலே உய­ரும் பாரந்­தூக்­கி­யைத் தாமும் தமது சக ஊழி­ய­ரு­மான திரு பிஸ்­வாஸ் ஜிபோ­மும் சுத்­தம் செய்­து­கொண்­டி­ருந்­த­போது பெண் ஒரு­வர் பதற்­றத்­

து­டன் தங்­களை அணு­கி­ய­தாக திரு டிப்டோ கூறி­னார்.

"சன்­ன­லுக்கு வெளியே நின்­று­கொண்­டி­ருந்த அந்­தச் சிறு­வனை அவர் எங்­க­ளி­டம் காட்­டி­னார். சிறு­வ­னின் வீட்­டுக் கதவு பூட்­டி­யி­ருந்­த­தா­க­வும் அவர் தெரி­வித்­தார்.

"பாரங்­தூக்­கி­யைப் பயன்­ப­டுத்தி சிறு­வ­னைக் காப்­பாற்­று­வ­து­தான் சிறந்த வழி என்­பதை நான் உணர்ந்­தேன். கீழி­லி­ருந்து திரு பிஸ்­வாஸ் வழி­காட்ட, பாரந்­தூக்­கியை இயக்கி அழு­து­கொண்­டி­ருந்த சிறு­வனை திரு டிப்டோ பத்­தி­ர­மாக மீட்­டார்.

இதைப் பார்த்து அங்கு கூடி­யி­ருந்த கூட்­டம் ஆர­வா­ரம் செய்­தது. சிறுவனை திரு டிப்டோ காப்பாற்றுவதைக் காட்டும் காணொளியை ­பங்­ளா­தே­ஷில் இருக்கும் திரு டிப்டோவின் தாயார் பார்த்து தமது மகனைத் தொடர்புகொண்டு பாராட்டினார். நற்­செ­ய­லில் ஈடு­பட்ட திரு டிப்­டோ­வுக்­கும் திரு பிஸ்­வா­சுக்கும் வெகு­மதி அளிக்க திட்­ட­மிட்­டி­ருப்­ப­தாக அவர்­கள் வேலை பார்க்­கும் நிறு­வ­னம் தெரி­வித்­துள்­ளது.