மாமியார், மைத்துனியர், மனைவி குளிப்பதைப் படமெடுத்த ஆடவருக்கு சிறை

1 mins read
e95a5c8e-0aa6-41a5-abd4-b1e4c6881188
-

மனைவி, மாமி­யார், மூன்று மைத்­து­னி­கள் ஆகி­யோர் குளிப்­பதை திருட்­டுத்­த­ன­மா­கப் பட­மெ­டுத்த 32 வயது ஆட­வ­ருக்கு நேற்று ஆறு வார சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது. பெண்­க­ளின் அடை­யா­ளத்­தைக் காக்­கும் பொருட்டு குற்­ற­வா­ளி­யின் விவ­ரங்­கள் வெளி­யி­டப்­ப­ட­வில்லை.

2015ஆம் ஆண்டு சமை­ய­ல­றைக் கடி­கா­ரத்­திற்­குள் கேம­ராவை ஒளித்து­ வைத்­துப் பட­மெ­டுத்­த­போது அதனை அவ­ரது மனைவி கண்­டு­பி­டித்து சண்டை போட்­டார்.

பின்­னர் 2017ஆம் ஆண்­டும் அதே­ குற்­றத்­தைச் செய்­தார். விவா­க­ரத்து பெற்­றுள்ள ஆட­வர், அந்த ஐந்து பெண்­க­ளு­டன் ஒரே வீட்­டில் வசித்­த­போது குற்­றங்­க­ளைச் செய்­ததாகக் கூறப்பட்டது.