இவ்வாண்டு சிங்கப்பூரில் உலகப் பொருளியல் கருத்தரங்கு நடைபெறும் தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
முன்னணி அரசியல் தலைவர்கள், வர்த்தகத் தலைவர்கள், கல்வியாளர்கள் ஆகியோர் பங்கேற்கும் இந்தக் கருத்தரங்கு மே மாதம் 13ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை நடைபெறும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால், இப்போது அந்தக் கருத்தரங்கு இரண்டு வாரங்கள் கழித்து மே மாதம் 25ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை நடைபெறும் என்று உலகப் பொருளியல் கருத்தரங்கு அமைப்பின் இணையப் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்தரங்கின் தேதிகள் மாற்றப்பட்டிருப்பதற்கான காரணங்கள் பற்றி அந்த இணையத் தளத்தில் குறிப்பிடவில்லை.

