டிபிஎஸ் வங்கியின் முன்னாள் ஊழியர் ஒருவர் நான்கு பேரை ஏமாற்றி $400,000 பணத்தைச் சுருட்டினார்.
அந்தப் பணத்தைத் தனது சூதாட்டக் கடனை அடைக்க அவர் பயன்படுத்தினார்.
மார்கஸ் லோ திம் முன், 31, என்ற இந்த ஆடவருக்கு புதன்கிழமை 33 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
ஏமாற்றியது தொடர்பான மூன்று குற்றச்சாட்டுகள், பொய்க் கையெழுத்து போட்டதாகக் கூறும் ஒரு குற்றச்சாட்டு, குற்றச்செயல் மூலம் கிடைத்த பலன்களை அனுபவித்ததாகக் கூறும் ஒரு குற்றச்சாட்டு ஆகியவற்றின் பேரில் லோ முன்னதாக குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
தண்டனை விதிக்கப்பட்டபோது இதர ஏழு குற்றச்சாட்டுகள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டன.
லோ, 2017 செப்டம்பர் மாதத்திற்கும் 2018 நவம்பர் மாதத்திற்கும் இடையில் டிபிஸ் வங்கியில் வேலை பார்த்தார். அப்போது அவர் செய்த குற்றச்செயல்கள் அம்பலமாயின.
வாடிக்கையாளர்களின் பணத்தை எடுத்து தனது சூதாட்டக் கடன்களை அடைக்கலாம் என்று லோ அநேகமாக 2018 அக்டோபரில் முடிவு செய்திருக்கக்கூடும் என்றும் பிறகு அவர் வாடிக்கையாளர்கள் நால்வரையும் ஏமாற்றியதாகவும் விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
லோ, ஏமாற்றிய பணத்தை முழுமையாக டிபிஎஸ் வங்கியிடம் திருப்பிக் கொடுத்துவிட்டார்.
சொந்த பிரச்சினைகள் இருப்பதாகவும் ஆகையால் ஜனவரி 18 வரை தண்டனையை ஒத்திவைக்கும்படியும் லோ நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார்.