சிங்கப்பூரில் புதிதாக 42 கிருமித்தொற்றுச் சம்பவங்கள் இன்று பதிவாகியுள்ளன. இதனுடன் சிங்கப்பூரின் மொத்த கிருமித்தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை 58,907க்கு உயர்ந்துள்ளது.
பாதிக்கப்பட்டோர் அனைவரும் வெளிநாடுகளில் கிருமித்தொற்று ஏற்பட்டு இங்கு வந்தவர்கள். கடந்தாண்டு மார்ச் 28 ஆம் தேதியிலிருந்து வெளிநாட்டில் கிருமித்தொற்று ஏற்பட்டு இங்கு வந்தவர்களுக்கான அன்றாட எண்ணிக்கையில் இது ஆக அதிகம்.

