கடல்துறைக்கும் விரிவடைகிறது 'சேஃப்என்ட்ரி'

கடல்துறைக்கும் விரிவடைகிறது 'சேஃப்என்ட்ரி'

1 mins read
ba01c8f3-6055-4da6-bc6a-558ba00c395d
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

தேசிய மின்­னி­லக்­கப் பதிவு முறை­யான 'சேஃப்என்ட்ரி' இவ்­வார பிற்­ப­கு­தி­யில் கடல் துறை­யி­ன­ருக்­கும் விரி­வு­ப­டுத்­தப்­பட இருக்­கிறது. அதன்­பொ­ருட்டு 'சேஃப்என்ட்ரி அட் சீ' என்­னும் தளம் மரினா சவுத், வெஸ்ட் கோஸ்ட் போன்ற படகுத் துறை களில் அறி­மு­க­மா­கும்.

வேலை கார­ண­மா­க கப்பல் பய­ணம் மேற்­கொள்வ­தோடு சிங்­கப்­பூ­ரின் நங்­கூ­ரத்­

த­ளத்­தில் நிறுத்தப்படும் கப்­ப­லில் வேலை செய்­யும் ஊழி­யர்­க­ளின் தொடர்­புத் தட­யங்­களை அறிய இந்த விரி­வாக்­கம் உத­வும் என போக்­கு­வ­ரத்து, வெளியு­றவு மூத்த துணை அமைச்­சர் சீ ஹொங் டாட் நேற்று தெரி­வித்­தார். அண்­மை­யில் கடல் துறை­யில் இரண்டு கொவிட்-19 சம்­ப­வங்­கள் பதி­வா­யின. அவர்களில் ஒருவர் நிரந்தரவாசி, மற்றவர் 55 வயது சிங்கப்பூரர்.