நோன்புப் பெருநாளை முன்னிட்டு நடைபெறும் வருடாந்திர கேலாங் சிராய் சந்தை இவ்வாண்டு இணையம் வழியாக நடத்தப்படும் என மக்கள் கழகம் தெரிவித்து உள்ளது.
வழக்கமாக நேரடியாக நடத்தப்படும் சந்தைகளிலும் வர்த்தகக் காட்சிகளிலும் ஏராளமானோர் ஒன்றுகூடுவர்.
ஆனால் கொவிட்-19 சூழலில் அதுபோன்ற நிகழ்வுகளை மீண்டும் நடத்த வாய்ப்பில்லை என்று ஊடகங்களுக்கு அனுப்பிய அறிக்கையில் கழகம் குறிப்பிட்டு உள்ளது.
இவ்வாண்டுக்கான கேலாங் சிராய் விற்பனை ஏப்ரல் 9 முதல் மே 13 வரை நடைபெறும் எனவும் அது கூறியுள்ளது.

