தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தோனீசிய விமான விபத்து: விசாரணையில் சிங்கப்பூர் உதவி

1 mins read
a54dea6f-cde1-452d-9b74-4c11ab51ce42
-

இந்­தோ­னீ­சி­யா­வின் ஸ்ரீவி­ஜயா விமான விபத்து குறித்த விசா­ர­ணை­யில் உதவ, சிங்­கப்­பூ­ரின் போக்­கு­வ­ரத்­துப் பாது­காப்பு விசா­ர­ணைப் பிரி­வைச் சேர்ந்த இரு­வர் ஜகார்த்தா சென்­றுள்­ள­னர் என்று போக்­கு­வ­ரத்து அமைச்சு நேற்று தெரி­வித்­தது.

சிங்­கப்­பூ­ரின் உத­வியை இந்­தோ­னீ­சிய தேசிய போக்­கு­வ­ரத்­துப் பாது­காப்­புக் குழு ஏற்­றுக்­கொண்­டதை அடுத்து இரு­வ­ரும் புதன்­கிழமை ஜகார்த்தா சென்­ற­னர்.

இம்­மா­தம் 9ஆம் தேதி, எஸ்ஜே182 என்ற அந்த விமா­னம் ஜகார்த்­தா­வி­லி­ருந்து புறப்­பட்ட சில நிமி­டங்­களில் ஜாவா கட­லில் விழுந்து நொறுங்­கி­ய­தில் அதில் பய­ணம் செய்த 62 பேரும் மாண்­ட­னர்.

இந்­தோ­னீ­சிய கடற்­படை முக்­கு­ளிப்­பா­ளர்­கள் கண்­டு­பி­டித்த இந்த போயிங் 737-500 விமா­னத்­தின் தர­வுப் பதிவை பல நாட்­க­ளுக்­குப் பின்­னர் கண்­டு­பி­டித்­த­னர்.

சிங்­கப்­பூர் புல­னாய்­வா­ளர்­களில் ஒரு­வ­ரான திரு அலெக்­சாண்­டர் லியோங் விமா­னப் பதி­வு­களில் நிபு­ணத்­து­வம் பெற்­ற­வர் என்­றும் மீட்­கப்­பட்ட தர­வு­க­ளைப் பார்க்க இந்­தோ­னீ­சிய அதி­கா­ரி­க­ளு­டன் இணைந்து பணி­யாற்றி வரு­வ­தா­க­வும் போக்­கு­வ­ரத்து அமைச்­சர் ஓங் யி குங் தமது ஃபேஸ்புக் பதி­வில் நேற்­றுக் கூறி­னார்.

மற்­ற­வர், திரு டேவிட் லிம், உரி­மம் பெற்ற விமான பரா­ம­ரிப்பு பொறி­யா­ள­ரான இவர் ஜகார்த்­தா­வில் உள்ள தஞ்சோங் பிரி­யோக் துறை­மு­கத்­தில் இருக்­கி­றார். அங்கு மீட்­கப்­பட்ட சிதை­வு­களை ஆரா­யும் குழு­வுக்கு இவர் உத­வு­வார்.