கவனக்குறைவால் சிகிச்சையில் தாமதம்; உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு $326,000 இழப்பீடு அளித்த மருத்துவமனை

கவனக்குறைவால் சிகிச்சையில் தாமதம்; உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு $326,000 இழப்பீடு அளித்த மருத்துவமனை

2 mins read
badf32c9-658a-4011-b98f-a3d7bc958420
-

கவ­னக்­கு­றை­வால் புற்­று­நோ­யா­ளி­யான திரு­வாட்டி நூர் அஸ்­லின் அப்­துல் ரஹ்­மா­னின் மர­ணத்­துக்­குக் கார­ண­மான குற்­றம் நிரூ­பிக்­கப்­பட்­ட­தால், மாண்ட அந்த நோயா­ளி­யின் குடும்­பத்­துக்கு $326,620 தொகை­யும் அத­னு­டன் 5.33% வட்டி, $105,000 வழக்­குக்­கான தொகை ஆகி­ய­வற்றை இழப்­பீ­டாக சாங்கி பொது மருத்­து­வ­மனை வழங்க வேண்­டும் என்று உயர் நீதி­மன்­றம் உத்­த­ர­விட்­டுள்­ளது.

நோய­றி­த­லைத் தெரி­விக்க கால தாம­தம் ஆன­தால், அவ­ருக்கு மீண்­டும் புற்­று­நோய் தாக்­கம் ஏற்­பட்டு, மோசமான உடல்நிலைக்குத் தள்ளப்பட்டார்.

இதன் தொடர்­பில் அவ­ரது குடும்­பத்­தி­னர் மருத்­து­வ­ம­னைக்கு எதி­ராக வழக்கு தொடுத்­த­னர். அது மேல் முறை­யீட்டு நீதி­மன்­றத்­துக்­குச் சென்­றது.

நூர் அஸ்­லி­னுக்கு சாத­க­மாக நீதி­மன்­றம் தீர்ப்பு வழங்­கிய ஐந்து வாரங்­க­ளுக்­குப் பின் 2019ஆம் ஆண்­டில் அவர் தமது 39வது வய­தில் மாண்­டார்.

அவ­ரது குடும்­பத்­தி­னர் மருத்­து­வ­மனை $13.46 மில்­லி­யன் தொகையை இழப்­பீ­டாக வழங்க வேண்­டும் என்று வழக்கு தொடுத்­தனர். ஆனால், மருத்­து­வ­மனை $20,800தான் கொடுக்க முடி­யும் என்று எதிர்­வா­தம் செய்­தது.

மேல் முறை­யீட்டு நீதி­மன்­றத்­தில் வழக்கு விசா­ரணை நடை­பெற்­றுக்­கொண்­டி­ருக்­கும் சம­யத்­தில் நூர் அஸ்­லி­னின் புற்­று­நோய் அவ­ரது மூளைக்­குப் பரவிவிட்­டது.

உயர் நீதி­மன்­றம் நேற்று இழப்­பீடு பற்றி தனது தீர்ப்பை அளிப்­ப­தற்கு முன் நூர் அஸ்­லி­னின் குடும்­பத்­துக்கு 2019 செப்­டம்­ப­ரில் $200,000 தொகை இடைக்­கால இழப்­பீட்­டுத் தொகை­யாக வழங்­க உத்தரவிடப்பட்டது.

இதைத் தடுக்க அம்­ம­ருத்­துவ மனை கடந்த ஆண்டு மூன்று முறை முயன்று தோல்வி கண்­டது.

திரு­வாட்டி நூர் அஸ்­லிம் மர­ண­மடை வதற்கு முன் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­சுக்கு அளித்த நேர்­கா­ண­லில், "மற்­ற­வர்­க­ளுக்கு இது­போன்ற சம்­ப­வம் நிக­ழக்­கூ­டாது என்­ப­தற்­கா­கத்­தான் நான் சாங்கி பொது மருத்­து­வ­மனை மீது வழக்கு தொடுத்­தேன்," என்­றார்.