பேருந்தில் ஓட்டுநரை ஒருவர் தாக்கியபோது தங்களுக்கு ஏற் படும் ஆபத்தையும் பொருட்படுத்தா மல் ஓடி வந்த உதவி செய்த இரு வருக்கு நேற்று விருது வழங்கப் பட்டது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி பாசிர் ரிஸ் டிரைவ் 1 வழியாக முஹமது முவாடாசிம் காசிம் நடந்து சென்றபோது பேருந்து நிறுத்துமிடத்தில் பேருந்து சேவை 21லிருந்து சில மாணவர்கள் இறங்குவதைக் கண்டார்.
ஆனால் வழக்கத்திற்கு மாறான இடத்தில் மாணவர்கள் இறங்கிய தால் அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
உடனே பேருந்துக்கு அருகே அவர் சென்று பார்த்தபோது ஓட்டு நரை ஒருவர் தாக்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
ஓட்டுநரைத் தாக்கியவர் முகக் கவசம் அணியவில்லை. முகக் கவசம் அணியுமாறு கூறியதால் ஆத்திரமடைந்த அந்த நபர் ஓட்டு நரை பல இடங்களில் குத்தினார். இதனால் பேருந்தை புளோக் 210க்கு அருகே நிறுத்திய ஓட்டுநர் போலி சாருக்காகக் காத்திருந்தார்.
பேருந்து நிறுத்துமிடத்தில் இருந்த நிதி ஆலோசகரான 29 வயது கிளமெண்ட் டானும் அங்கு வந்த முவாடாசிமும் மற்றொரு வருடன் பேருந்துக்குள் ஓடிச்சென்று ஓட்டுநரைத் தாக்கியவரை மடக்கிப்பிடித்தனர். சந்தேக நபரிடம் கத்தி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு உடனே அவரிடமிருந்து அது பறிக்கப்பட்டது.
பின்னர் தாக்கியவரை மூவரும் போலிசாரிடம் ஒப்படைத்தனர்.
காயம் விளைவித்ததற்காகவும் ஆயுதம் வைத்திருந்ததற்காகவும் அந்த நபருக்கு கடந்த டிசம்பர் 16ஆம் தேதி 16 வாரம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு பேருந்து ஓட்டுநரைத் தாக்கிய 40 சம்பவங்கள் நடந்துள்ளன. இவற்றில் பாதி, முகக்கவசம் தொடர்பானவை.
பொதுமக்களுக்கு உதவும் மனப் பான்மையுடன் செயல்பட்ட முவாடாசிமும் டானும் நேற்று நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் கௌரவிக்கப்பட்டனர்.
இவர்களுடன் சேர்த்து மொத்தம் பத்து பேருக்கு விருது கிடைத்தது.
குடிமைத் தற்காப்புப் படையின் பேரிடர் உதவி, மீட்புக் குழுவைச் சேர்ந்த ஆறு பேரும் விருது பெற்ற வர்களில் அடங்குவர். பேருந்தில் பெண்ணை மானபங்கப்படுத்திய ஒருவர் தப்ப முயற்சி செய்தபோது இவர்கள் துரத்திப் பிடித்து போலி சாரிடம் ஒப்படைத்தனர்.