கல்வித் தகுதி இல்லாதபோதும் போதிய தேர்ச்சிகளையும் தொழிலக அனுபவமும் பெற்றிருக்கும் தொழில்நுட்பர்களும் தொழில்நுட்பவியலாளர்களும் புதிய சான்றிதழ் திட்டம் மூலம் பொறியாளராவது எனும் தங்களது கனவை நனவாக்கலாம்.
உரிமம் பெற்ற பொறியியல் தொழில்நுட்பவியலாளர் மற்றும் தொழில்நுட்பர் சான்றிதழ் திட்டம் நேற்று அறிமுகப்படுத்தப் பட்டது.
‘தேசிய பொறியியல் வாழ்க்கைத்தொழில் முன்னேற்றக் கல்விப் பாதை’யின்கீழ் வரும் இத்திட்டம், உரிமம் பெற்ற பொறியியல் தொழில்நுட்பர் (CETn), உரிமம் பெற்ற பொறியியல் தொழில்நுட்பவியலாளர் (CETg), உரிமம் பெற்ற பொறியாளர் (CEng) என மூன்று சான்றிதழ் நிலைகளை உள்ளடக்கியது.
சிங்கப்பூர் பல்கலைக் கழகத்தில் நேற்று இடம்பெற்ற இத்திட்டத்தின் அறிமுக நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய கல்வி, மனிதவள துணை அமைச்சர் கான் சியாவ் ஹுவாங், இந்தத் தேர்ச்சி அடிப்படையிலான வழிமுறை நமது முறையான உயர்கல்விப் பாதையை முழுமை பெறச் செய்யும் என்றார்.