சிங்கப்பூர் குடியரசுக் கடற்படைக்குச் சொந்தமான இரண்டு கப்பல்கள் சுற்றுக்காவல் பணியில் மீண்டும் இணைந்துள்ளன.
கடற்படைக்குச் சொந்தமான மற்ற சுற்றுக்காவல் கப்பல்களுடன் இணைந்து அவ்விரு கப்பல்களும் சிங்கப்பூரின் கடற்பகுதியைப் பாதுகாக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன் களமிறங்கியுள்ள இந்த இரண்டு கப்பல்கள் அதிநவீன எச்சரிக்கை ஒலி, ஒளி தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளன. அதுமட்டுமல்லாது, கடற்பகுதியைப் பாதுகாக்க தேவையான புதிய, மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தை அவை கொண்டுள்ளன.
புதிய கடற்துறைப் பாதுகாப்புப் படை நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது.
அதில் சென்டினல், கார்டியன் என்று அழைக்கப்படும் இந்த இரண்டு புதுப்பிக்கப்பட்ட கப்பல்களும் சேர்க்கப்பட்டுள்ளதாக தற்காப்பு அமைச்சு தெரிவித்தது.
புரொடெக்டர், பேஸ்டியன் ஆகிய இரண்டு கப்பல்களும் அடுத்த சில மாதங்களில் புதுப்பிக்கப்பட்டு சுற்றுக்காவல் பிரிவுடன் சேர்க்கப்படும் என்று தற்காப்பு அமைப்பு கூறியது.
இந்தக் கப்பல்கள் ஏறத்தாழ 20 ஆண்டுகளாக சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
அவற்றுக்குப் பதிலாக வேறு வகை கப்பல்கள் பயன்படுத்தப்பட்டன.
சுற்றுக்காவலுக்குப் பயன்படுத்தப்பட்ட கப்பல்களில் இரண்டு கப்பல்கள் சுற்றுக்காவல் பணியிலிருந்து மீட்டுக்கொள்ளப்பட்டன. புதிய சுற்றுக்காவல் பிரிவை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி ஆர்எஸ்எஸ் சிங்கப்பூரா-சாங்கி கடற்படை முகாமில் நடைபெற்றது.
அதற்குக் கடற்படைத் தலைவர் ஏரன் பெங் தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் சிங்கப்பூர் குடியரசுக் கடற்படையின் மூத்த அதிகாரிகளும் கடற்துறை அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.