கடற்கரையிலும் உணவகங்களிலும் ஒன்றுகூடிய 131 பேருக்கு அபராதம்

கடற்கரையிலும் உணவகங்களிலும் ஒன்றுகூடிய 131 பேருக்கு அபராதம்

3 mins read
256d83b7-dffb-4e1f-9cce-e531817670dc
விதிமுறைக்கு உட்படாமல் கடற்கரையிலும் உணவகங்களிலும் ஒன்றுகூடியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. படங்கள்: தேசிய பூங்காக் கழகம், நகர மறுசீரமைப்பு ஆணையம் -
multi-img1 of 2

கொரோனா கிரு­மிப் பர­வ­லைத் தடுப்­ப­தற்­காக நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்ட பாது­காப்பு விதி­மு­றை­களை மீறிய குற்­றத்­துக்­காக இரண்டு உண­வ­கங்­க­ளின் உரி­மை­யா­ளர்­கள் மீது வரும் செவ்­வாய்க்­கி­ழ­மை­யன்று குற்­றம் சாட்­டப்­ப­ட­வி­ருக்­கிறது.

மார்க் எண்­டர்­பி­ரைஸ், கிம்ஸ் பிளேஸ் கடல்­ உ­ணவு உண­வ­கம் ஆகி­ய­வற்­றுக்கு எதி­ராக நட­

வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­கிறது. பாது­காப்பு விதி­மு­றை­களை மீறி­ய­தால் அதை மூட பல­முறை உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டும் மார்க் என்­டர்­பி­ரைஸ் அதைப் புறக்­க­ணித்­த­

தா­கக் கூறப்­ப­டு­கிறது.

பல மேசை­களில் ஐந்­துக்­கும் மேற்­பட்­டோரை அமர கிம்ஸ் பிளேஸ் கடல் ­உ­ணவு உண­வ­கம் அனு

­ம­தித்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது. அது­மட்­டு­மல்­லாது, கடந்த ஆண்டு செப்­டம்­பர் மாதத்­தில் அந்த உண­வ­கத்­தில் கரா­வோக்கே நட­வ­டிக்­கை­கள் அனு­ம­திக்­கப்­பட்­டன.

இந்த விதி­மீ­றல்­க­ளுக்­காக இம்­மா­தம் 6ஆம் தேதி­யி­லி­ருந்து பிப்­ர­வரி 4ஆம் தேதி வரை மொத்­தம் 30 நாட்­க­ளுக்கு உண­வ­கத்தை மூட வேண்­டும் என கிம்ஸ் பிளேஸ் கடல்­உ­ணவு உண­வ­கத்­துக்கு உத்­த­ர­வி­டப்­பட்­டது.

தண்­டனை விதிக்­கப்­பட்ட 12 உண­வ­கங்­களில் இந்த இரண்டு உண­வ­கங்­களும் அடங்­கும். உண­வ­கங்­களை மூட நான்கு உண­வ­கங்­க­ளுக்கு உத்­த­ர­வி­டப்­பட்­டது. ஆறு உண­வ­கங்­க­ளுக்கு அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டது.

கடந்த ஆண்டு செப்­டம்­பர் மாதம் 7ஆம் தேதி­யன்று கிம்ஸ் பிளேஸ் கடல்­ உ­ணவு உண­வ­கத்­தில் ஊழி­யர்­க­ளுக்­கான ஒன்­று­கூ­ட­லுக்கு ஏற்­பாடு செய்­த­தாக சிங்­கப்­பூர் ஸ்ட்­ரெய்ட்ஸ் ஒயின் நிறு­வ­னம் மீது குற்­றம் சாட்­டப்­படும்.

அந்த ஒன்­று­கூ­ட­லில் 26 ஊழி­யர்­கள் கலந்­து­கொண்­ட­னர். அவர்­கள் அனை­வ­ருக்­கும் தலா $300 அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டது.

350 ஜூரோங் ஈஸ்ட் அவென்யூ 1ல் உள்ள சியாவ் யாவ் கெ உண­வ­கம், 40 சாகோ ஸ்தி­ரீட்­டில் உள்ள மெயின் என்ட்­ரஸ், லக்கி பிளா­சா­வில் உள்ள கிலினி கோப்­பித்­தி­யாம், 2 அலி­வால் ஸ்தி­ரீட்­டில் உள்ள தியேன் யா ஹாய் ஜியாவ் கேடிவி ஆகி­யவை விதி­மு­றை­களை மீறி­ய­தால் அவற்றை மூட உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது.

உணவு மற்­றும் பானம் சேவை­களை நடத்த உரி­மம் வைத்­தி­ருக்­கும் மது­பா­னக்­கூ­ட­மான மெயின் என்ட்­ர­சில் எட்­டுக்­கும் மேற்­பட்ட வாடிக்­கை­யா­ளர் குழுக்­கள் அனு­ம­திக்­கப்­பட்­ட­தா­கக் கூறப்­ப­ட்டது.

அது­மட்­டு­மல்­லாது மது­பா­னக்­கூ­டத்­தில் வாடிக்­கை­யா­ளர்­கள் உரை நடத்­த­வும் அந்த மது­பா­னக் கூடம் அனு­ம­தித்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது. அத்­து­டன், இம்­மா­தம் 23ஆம் தேதி­யன்று மது­பா­னக்கூடத்துக்கு வந்த வாடிக்­கை­யா­ளர்­க­ளின் உடல்­வெப்­ப­நி­லையை அது சோதிக்­க­வில்லை என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

கொவிட்-19 கிரு­மிப் பர­வ­லைத் தடுக்க நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்ட தற்­கா­லிக விதி­மு­றை­க­ளின்­படி உண­வ­கங்­களில் வாடிக்­கை­யா­ளர்­கள் உரை­யாற்­றவோ பாடவோ கூடாது. இம்­மா­தம் 26ஆம் தேதி­யி­லி­ருந்து அடுத்த மாதம் 4ஆம் தேதி வரை மூடப்­பட வேண்­டும் என்று மெயின் என்ட்­ரஸ் மது­பா­னக்­கூ­டத்­துக்கு சிங்­கப்­பூர் பய­ணத்­து­றைக் கழ­கம் உத்­த­ர­விட்­டுள்­ளது.

மேலும் நான்கு உண­வ­கங்­க­ளுக்கு தலா $1,000 அப­ரா­த­மும் தொடர்ந்து விதி­மு­றை­களை மீறி­ய­தற்­காக இன்­னோர் இரண்டு உண­வ­கங்­க­ளுக்­கு தலா $2,000 அபராதமும் விதிக்­கப்­பட்­டது

இந்­நி­லை­யில், கொவிட்-19 விதி­மு­றை­களை மீறி­ய­தற்­காக மேலும் 131 பேருக்கு அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டுள்­ளது.

இம்­மா­தம் 22, 23ஆம் தேதி­களில் உண­வ­கங்­கள், கடைத்­

தொ­கு­தி­கள், மற்ற பொது இடங்­கள் ஆகி­ய­வற்­றில் அர­சாங்க அமைப்­பு­கள் தீவிர கண்­கா­ணிப்­புப் பணி­களில் ஈடு­பட்­ட­தால் விதி­மு­றை­களை மீறிய பலர் அகப்­பட்­ட­தாக நீடித்த நிலைத்­தன்மை, சுற்­றுப்­புற அமைச்சு தெரி­வித்­தது.

எட்­டுக்­கும் மேற்­பட்­ட­வர்­கள் ஒன்­று­கூ­டிய விதி­மீ­ற­லுக்­காக 27 பேருக்கு தலா $300 அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டது.

எஞ்­சி­யுள்ள 104 பேரும் எட்­டுக்­கும் மேற்­பட்­ட­வர்­க­ளு­டன் ஒன்­று­கூ­டி­ய­தற்­கும் மற்­ற­வர்­க­ளு­டன் பூங்­காக்­க­ளி­லும் கடற்­க­ரை­க­ளி­லும் இருந்­த­தற்­கா­க­வும் அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டது.