சிங்கப்பூர்-ஜோகூர் ரயில் இணைப்பு: $180 மி. மதிப்புள்ள 2ஆம் சிவில் குத்தகை பற்றி அறிவிப்பு

சிங்கப்பூர்-ஜோகூர் ரயில் இணைப்பு: $180 மி. மதிப்புள்ள 2ஆம் சிவில் குத்தகை பற்றி அறிவிப்பு

2 mins read
96d9b6bb-a018-4f86-a30d-175779592c11
படம்: நிலப் போக்குவரத்துக் கழகம் -

உட்­லண்ட்­சில் சிங்­கப்­பூ­ருக்­கும் ஜோகூர் பாரு­வுக்­கும் இடை­யி­லான ரயில் இணைப்­புத் திட்­டத்­தின் நில அகழ்வு நடை­பெற்ற ஒரு வாரத்­துக்­குப் பிறகு அதன் கட்­டு­மா­னத்­துக்­கான இரண்­டாம் சிவில் குத்­தகை நேற்று வழங்­கப்­பட்­டது.

இரு நாடு­க­ளை­யும் இணைக்­கும் 25 மீட்­டர் உய­ர­முள்ள சிங்­கப்­பூர் பகு­தி­யில் உள்ள கடல் மேம்­பா­லம், ரயில் தடங்­களை இணைக்­கும் சுரங்­கங்­கள் ஆகி­ய­வற்­றைக் கட்­டும் $180 மில்­லி­யன் மதிப்­பி­லான குத்­தகை சிங்­கப்­பூ­ரில் கிளை நிறு­வ­னம் கொண்­டுள்ள 'சைனா கம்­யூ­னிக்­கே­ஷன்ஸ் கன்ஸ்­டி­ரக்­‌ஷன்' நிறு­வ­னத்­துக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது என்று நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை­யம் நேற்று தெரி­வித்­தது.

அந்­நி­று­வ­னம் தற்­போது ஜூரோங் வட்­டா­ரப் பாதை­யில் உள்ள பூன்லே நிலை­யத்­தைக் கட்­டிக்­கொண்­டி­ருக்­கிறது.

சீனா, கென்யா போன்ற நாடு­களில் ரயில் கட்­டு­மா­னத் திட்­டங்­களை நிறை­வேற்­றி­யுள்ள அந்­நி­று­வ­னம், சிங்­கப்­பூர் பகு­தி­யில் உள்ள கடல் மேம்­பா­லம், ரயில் தடங்­களை இணைக்­கும் சுரங்­கங்­கள் ஆகி­ய­வற்­றைக் கட்­டும் பணி­களை இவ்­வாண்­டின் அடுத்த காலாண்­டில் தொடங்­கும் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

ஜோகூர் நீரி­ணை­யில், சிங்­கப்­பூர் பகு­தி­யில் உள்ள கடல் மேம்­பா­லம் சிங்­கப்­பூ­ரின் நிலப் பகு­தியை அடைந்­த­வு­டன் உட்­லண்ட்ஸ் நார்த் எம்­ஆர்டி முனை­யத்­து­டன் இணைக்­கும் சுரங்க ரயில் பாதை­யு­டன் இணை­யும்.

நான்கு கிலோ மீட்­டர் தூரம் கொண்ட ரயில் இணைப்பு வரும் 2026ஆம் ஆண்டு இறு­திக்­குள் செயல்­ப­டத் தொடங்­கி­வி­டும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

ஜோகூர் பாரு­வில் உள்ள புக்­கிட் சாகார் ரயில் நிலை­யத்­தின் கட்­டு­மா­னப் பணி­கள் கடந்த ஆண்டு நவம்­ப­ரில் தொடங்­கின.

ஒரு மணி நேரத்­துக்கு ஒரு திசை­யில் 10,000 பேர் பய­ணம் செய்­ய­லாம் என்று எதிர்­பார்க்­கப்­படும் இந்த இணைப்பு ரயில் பய­ணம் ஐந்து நிமி­டங்­கள்­தான் நீடிக்­கும்.

இந்த ரயில் இணைப்பு ஜோகூர் கடற்­பா­லத்­தில் ஏற்­படும் கடும் போக்­கு­வ­ரத்து நெரி­ச­லைக் குறைக்­கும். கொவிட்-19 முந்­திய காலத்­தில் நாள்­தோ­றும் 300,000 பேர் கடற்­பா­லத்­தைக் கடந்து செல்­வர்.

இத்­திட்­டத்­தில் $932.8 மில்­லி­யன் மதிப்­பி­லான முத­லா­வது சிவில் குத்­தகை பென்டா-ஓஷி­யன் கட்­டு­மான நிறு­வ­னத்­துக்கு கடந்த ஆண்டு நவம்­ப­ரில் வழங்­கப்­பட்­டது.

அந்­நி­று­வ­னம் உட்­லண்ட்ஸ் நார்த் ரயில் முனை­யம், அத­னுள் இருக்­கும் சுங்­கத்­துறை, சோத­னைச் சாவடி கட்­ட­டம், சுரங்­கப் பாதை ஆகி­ய­வற்­றைக் கட்­டும் என்றும் ஆணையம் தெரிவித்தது.